வேளாங்கன்னி நோக்கிச் சென்ற சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்

velankanniதமிழகத்தில் வேளாங்கன்னி நோக்கிப் பயணித்த இலங்கையர்கள் சிலர் திருவாரூர் மாவட்டத்தில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிங்களவர்கள் 75 பேர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர்கள் வேளாங்கன்னி நோக்கிச் செல்வதால் ஏற்படக்கூடிய மோதல் நிலைமையை தவிர்க்கும் நோக்கிலேயே இந்திய போலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திருவாரூர் – நீதமங்களம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கையர்களின் பேருந்தை  நிறுத்தி அவர்கள் வேளாங்கன்னி நோக்கிச் செல்வதைத் தவிர்க்குமாறு போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

TAGS: