இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் : பிரித்தானியா

alistair_burஇலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும்  போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான செயலாளர் அலஸ்டயார் பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே இறுதிப்போரில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.

இரண்டு தடவைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிறைவேற்றி இருந்த போதும், இலங்கையில் அது நடைமுறையாக்கப்படவில்லை. இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்கூட முழுமையாக அமுலாக்கப்படவில்லை.

இந்நிலையில் இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGS: