சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர் தப்பியோட்டம்

colombo prisonபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்  ஒருவர் ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை வெசாக் வலயத்தில் பணியாற்றுவதற்காக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த சிறைக் கைதிகளும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தபோதே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

வெசாக் வலயத்தில் பணியாற்றுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரும் ஒருவர், அவர் ஏனைய நான்கு கைதிகளுடன் சேர்ந்து வெசாக் வலய பணியை சந்தர்ப்பமாக பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்த புலி உறுப்பினருக்கு ஐந்து ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் தண்டனைக் காலம் எஞ்சியிருக்கும் நிலையில் இவ்வாறு பொதுப் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளை கண்டு பிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

TAGS: