எர் டெக் ஹுவாவுக்கு டிஏபி கடும் எச்சரிக்கை

1erகட்சிக் கட்டளையை மீறி நேற்றைய நாடாளுமன்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்ரி எம்பி எர் டெக் ஹுவா-வை டிஏபி கொறாடா அந்தோனி லோக் கடுமையாக எச்சரிப்பார்.

ஆனால், எர் எழுத்து வடிவில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதால் அவ்விவகாரம் கட்சியின் ஒழுங்குக் குழுவுக்கு கொண்டுசெல்லப்பட மாட்டாது என்று அதன் தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் லோக் கூறினார்.

டிஏபி அதன் எம்பிகள் அனைவருக்கும் நாடாளுமன்ற விளக்கமளிப்பில் கலந்துகொள்ளக்கூடாது என்று மின்னஞ்சல் வழியாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் உத்தரவிட்டிருந்தது. எர் அதையும் மீறி  அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே பக்காத்தான் எம்பி அவர்தான்.

TAGS: