புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு: இந்தியாவிடம் அறிக்கை கோரும் இலங்கை

eelam07713bஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள புத்தகயா விகாரையில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களைத் தொடர்ந்து, அதன் பாதுகாப்புத் தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் அறிக்கையொன்றைக் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை கிடைக்கும் வரையில் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே குறித்த பகுதிக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் தமக்கு அறிக்கை கிடைக்கப்பெறும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

TAGS: