புலிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: ஹெல உறுமய

eelam11713aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஆதரவளிக்கும் தரப்பினரை இணைத்துக் கொள்ளக் கூடாது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு சில நாடுகள் கோரி வருகின்றன. எனினும், இதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.

இது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் கேட்பது போன்றதாகும்.

நாட்டுக்கு எதிராக செயற்படும் துரோகிகளை தேர்தல் கண்காணிப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒர் கட்சியாகும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

TAGS: