இப்படியும் திருடுவார்களா? பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

wigs_002வெனிசுலா நாட்டில் கூட்டநெரிசலிலை பயன்படுத்தி நூதனமான முறையில் பெண்களின் கூந்தலை திருடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

வெனிசுலாவின் மாராகைபோ நகரில் நூதனமாக முறையில் திருட்டு கும்பலொன்று நடமாடி வருகிறது.

அதாவது கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களின் தலைமுடியை திருடுவது தான் அவர்களது பழக்கம்.

அதிலும் மிக நீளமான கூந்தல் உள்ள பெண்கள் என்றால், துப்பாக்கி முனையில் மிரட்டி திருடுகின்றனராம்.

இதற்கு காரணம், அழகு சாதன நிலையத்திற்கு சென்று செயற்கை சிகை அலங்காரம் செய்யும் பழக்கம் பெண்களிடையே அதிகரித்தது தான் என்று கூறப்படுகிறது.

எனவே இந்த விசித்திர திருட்டை தடுக்கவும், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நகர மேயர் ரோகாலிஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.