நவனீதம்பிள்ளைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர மகஜர்

navaneethmpilaiஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

47 அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு அவசர மகஜரை அனுப்பி வைத்துள்ளன.

முன்னாள் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிடுமாறு நவனீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளனர்.

நீதிமன்ற அறிக்கை, பொலிஸ் அறிக்கை மற்றும் அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை பார்வையிடுமாறு கோரியுள்ளனர்.

வடக்கு விஜயத்தின் போது இலங்கை இராணுவத்தினதோ அல்லது பொலிஸாரினதோ உதவியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 800 புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மகஜரை அனுப்பி வைத்த நபர் சிங்கப்பூரிலிருந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: