வடமாகாண சபையைக் கைப்பற்றியதும் இராணுவத்தை அகற்றுவது உறுதி: தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் சி.வி.விக்னேஸ்வரன்

tna_election_manifesto_006வடமாகாண சபைத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததும் வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம் அதாவது, 1983 ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு கொண்டு செல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

TAGS: