இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளில் ஆதரவற்ற பல சிறுவர்கள்:சர்வதேச…

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு கொண்டுவரப்பட்ட ரோஹிங்கியா அகதிகளில் ஆதரவற்ற பல சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் கள மதிப்பீட்டைத் தொடர்ந்து, மியன்மாரில் இருந்து 49…

இலங்கைக்கு வருமாறு திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பௌத்த…

பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த வாரத்தில் அவர்கள், தலாய் லாமாவை சந்தித்தனர்.ராமாண்ய…

இலங்கையில் இம்மாதத்திற்குள் மூட வேண்டிய அபாயத்தில் 20000 வணிகங்கள்

இலங்கையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களை மீளச்செலுத்தும் மொரடொரியம் என்ற நிவாரணக்காலத்தை மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உள்ளூர் வணிக நிறுவனங்கள், மத்திய வங்கியிடம் வலியுறுத்தியுள்ளன. தேசிய வர்த்தக பாதுகாப்பு சபையின் கூற்றுப்படி, தேசிய பொருளாதாரத்தில் நிலவும் சவால்கள் காரணமாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து…

நாட்டை நாசமாக்கிய ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது – மைத்திரி

நாட்டை படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்திருந்தால் இந்த நாடு மோசமான நிலைக்குச்…

தேர்தல் நடத்தப்பட்டால் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும், இலங்கை நிதியமைச்சின்…

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதுமானதாக இல்லை என்ற பின்னணியில் தேர்தல் நடத்தப்பட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்று நிதியமைச்சின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த…

இலங்கையில் தனிநபர் வருமான வரிக்கு எதிராக அரச ஊழியர்கள் போர்…

புதிய தனிநபர் வருமான வரியை மீளப்பெறுமாறு கோரி 20,000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களின் கையொப்பங்களுடன் கூடிய மனுவொன்று விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய தனிநபர் வருமான வரியை நீக்கக் கோரி…

இலங்கையின் 75 வது சுதந்திரதினக் கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பாக பெப்ரவரி நான்காம்…

இலங்கைக்குள் இரகசியமாக நுழைந்துள்ள இரு நாடுகள்! சிங்கப்பூர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு…

கடந்த ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்குண்ட நிலையில் அண்டை நாடான இந்தியா, சீனாவின் நிழல் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்தியா, கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவான உதவியாக வழங்கியது.…

கொழும்பை கைப்பற்றப் போவதாக தனிஷ் அலி சூளுரை

எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி தெரிவித்துள்ளார். அதன் மூலம் கொழும்பு அதிகாரம் உறுதியாக கைப்பற்றப்படும் எள அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறும் வேளையில்…

விசா மோசடி – இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதுரகம் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்ளப்படும் அமெரிக்க விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில், கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவு விசா விண்ணப்பம் தொடர்பாக தொடர்பு கொள்ள WhatsApp ஐப் பயன்படுத்தாது என தூதரகம் தெரிவித்துள்ளது. உங்களுக்கான…

உலகில் அதிக அரச விடுமுறைகள் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் உள்ளத்தக்க தெரிவிக்கப்ட்டுள்ளது. 190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன் அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 5…

இராணுவ அதிகாரிக்கு எதிராக தடை விதித்துள்ள அமெரிக்கா! இலங்கை அரசாங்கத்தின்…

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த வழக்கில் இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தகவல்கள்…

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்நாட்டில் தற்போது புதுப்பிக்க பாகிஸ்தான் புலனாய்வு சேவை (ஐஎஸ்ஐ) முயற்சிப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது முதல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பது வரை, இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க இந்தியாவுக்கு எதிரான சக்திகளை பாகிஸ்தான் ஆதரித்து…

இலங்கையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் புழங்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்டிகை நாட்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,…

இந்த அரசாங்கம் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை! பொன்சேகா

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது, இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், எமது நாடு…

சீனாவில் இலங்கை தூதரக பணியாளர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். BF.7 Omicron மாறுபாட்டால், சீனாவில் கோவிட்  அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் தொற்று இந்தநிலையில், தூதரகத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் உட்பட அனைத்து இலங்கை ஊழியர்களும் மிதமான மற்றும் லேசான அறிகுறிகளுடன் கோவிட் தொற்றினால்…

இலங்கையில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதான வைத்தியசாலைகளில் மருந்துகள் தட்டுப்பாடு…

தேசிய இனப்பிரச்சினையை தேர்தல் பிரச்சாரத்துக்காக ரணில் பயன்படுத்தக்கூடாது

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய சுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதனை தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் பயன்படுத்தக்கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (21.12.2022)…

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி: திருச்சியில் கைதுசெய்யப்பட்ட…

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள்ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு…

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அறிமுகமாகும் புதிய விசாக்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளுக்காக வரும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விசா வகைகளை அறிமுகப்படுத்த…

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்

சமகாலத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பேசப்படுவதோடு, இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான் எனவும், இவ்விடயத்தில் மக்களும் போலவே அரசாங்கமும் முடிவெடுக்க வேண்டுமெனவும், தாராளமயம், கம்யூனிஸ்ட், ஜனநாயகம் என பல்வேறு கோட்பாடுகள் இருந்தாலும்,நம்…

கத்தாரில் கேள்விக்குறியாகும் இலங்கை தொழிலாளர்களின் நிலை

கத்தாரில் 2022 க்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரானது மிக பிரம்மாண்டமான திருவிழாவாக நடந்து முடிந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை…

அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்களுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல்

அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு "Ocean Odyssey" என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை குறித்த கப்பல்…