பிரஞ்சு நீதிபதிகள் சுவாராம் சாட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்

மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்  சமர்பித்த சாட்சிய அறிக்கை பாரிஸ் பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அது அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை விசாரணை நீதிபதி Roger Le Loire முன்னிலையில் வைத்தது. 2002ம் ஆண்டு மலேசிய அரசாங்கத்துக்கு…

மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற கடிகாரம் முடக்கப்பட்டது

கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்திராத வகையில் நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு 12 மணி அடித்ததும் நேர ஒட்டத்தை முடக்கியது. தேங்கியிருக்கும் மசோதாக்களையும் பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உதவியாக அவ்வாறு செய்யப்பட்டது. "அவையில் இருந்த இலக்கவியல் கடிகாரங்கள் அனைத்தும் நின்று விட்டன," என்று ராசா எம்பி அந்தோனி லோக் கூறினார். மக்களவைக்…

மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாஸ் “பாதுகாவலர்களை” அனுப்புகிறது

டத்தாரான் மெர்டேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பாஸ் யுனிட் அமல் என்றழைக்கப்படும் அதன் பழுத்த சிவப்பு நிற சீருடை பொதுநல குழுவை களமிறங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்றிரவிலிருந்து 30 யுனிட் அமல் ஆர்வலர்கள் டத்தாரான் மெர்டேக்காவில் நிறுத்தி வைக்கப்படுவர் என்று பாஸ் இளைஞர் பிரிவு செயலாளர் கைருல்…

சிலாங்கூரில் போலியான வாக்களர்களுக்கு எதிரான போருக்கு ரிம5 மில்லியன் செலவிடப்படும்

சிலாங்கூர் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு அதன் அரசு பணியாளர்களையும் கிராமத் தலைவர்களையும் உட்படுத்தும் ஒரு "சிலாங்கூர்கு பெர்சே" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. "இசி (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு" இத்திட்டம் உதவும் என்று…

உதயகுமார்: எனக்கு எதிரான தேசநிந்தனை வழக்கை கை விடுங்கள்

தேசியநித்தனைச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நஜிப்பின் நேர்மையை நிருபீக்க தமக்கு எதிரான தேசநிந்தனை குற்றச்சாட்டை கை விடுமாறு இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் சவால் விட்டுள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி இட்டுள்ள இது சம்பந்தமான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார்.…

எதிர்த்தரப்பு ஒரு போதும் திருப்தி அடையாது என்கிறார் இப்ராஹிம் அலி

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இல்லாத வரை தேர்தல் நடைமுறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டா என பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "அவை அதிகாரத்தில் இல்லாத வரையில் இசி என்ற தேர்தல் ஆணையம் தூய்மையானதாக இல்லை என தொடர்ந்து கூறும்.  எதிர்க்கட்சிகள்…