புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பான அதிகாரிகளின் இறுதி அறிக்கையைச் சிலாங்கூர் பாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்த அறிக்கை முழுமையடையவில்லை என்றும், பொறுப்பான தரப்பினரைப் பொறுப்பேற்க வைக்கத் தவறிவிட்டது என்றும் அது கூறுகிறது. அதன் தலைவர் அப் ஹலிம் தமுரி கூறுகையில், இந்த அறிக்கை பல கேள்விகளை…
“அந்நிய” வாக்காளர்கள் எனக் கூறப்பட்ட 200 பேரை குடியிருப்பாளர்கள் சூழ்ந்து…
மலேசிய அடையாளக் கார்டுகளையும் வாக்களிக்கும் உரிமையையும் பெறவிருப்பதாக கூறப்பட்ட- அந்நியர்கள் என தாங்கள் சந்தேகிக்கும் 200 பேர் கொண்ட குழு ஒன்றை புத்ராஜெயாவில் உள்ள தேசா ஸ்ரீ புத்ராவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சூழ்ந்து கொண்டனர். கூட்டரசு நிர்வாகத் தலைநகருக்கு அருகில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றில் குடியிருப்பாளர்கள் அந்தக்…
பிஎன், பக்காத்தான் பட்ஜெட்டுகளில் தேர்தல் காலக் கவர்ச்சிதான் அதிகம்
மாற்றரசுக் கட்சி, அரசாங்கம் இரண்டுமே பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தன. இரண்டிலும் தேர்தல்கால கவர்ச்சி அம்சங்கள் நிறைய இருந்தனவே தவிர கொள்கைரீதியான பரிசீலனைகளுக்குக் குறைந்த இடமே கொடுக்கப்பட்டிருந்தது என்கிறார் துங்கு ஜைன் அல் அபிடின் முக்ரிஸ். ஜனநாயக பொருளாதார விவகாரக் கழகத்தின் நிறுவனரான அவர், கூடுதல் பொருளாதாரத் தாராளமயத்துக்குப் பாதை…
குதப்புணர்ச்சி வழக்கு ll: மூசா, ரோட்வான் ஆகியோரை பிரதிவாதித் தரப்பு…
குதப்புணர்ச்சி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் அனுப்பப்பட்ட அன்வார் இப்ராஹிமின் அழைப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு சாட்சிகளை அழைப்பதில்லை என பிரதிவாதித் தரப்பு இன்று முடிவு செய்துள்ளது. முன்னாள் தேசிய போலீஸ்…
காணாமல் போன முக்கிய பத்திரங்களுக்கு இனிமேல் போலீஸ் புகார் தேவை…
காணாமல் போன அல்லது சேதமடைந்த பிறப்பு, திருமண, கல்வி, வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், மலேசிய பாஸ்போர்ட், வாகனமோட்டுவதற்கான அனுமதி, நில உரிமைப் பத்திரம் ஆகியவை குறித்து பொது மக்கள் இனிமேல் போலீஸில் புகார் செய்ய வேண்டியதில்லை. பிரதமர் துறை செப்டம்பர் 29ம் தேதி வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான மூன்றாவது…
அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா இன்று தனது முதல் பக்கச் செய்தியில் செய்தி இணையத் தளமான மலேசியாகினி அரசர் அமைப்பு முறையைக் கீழறுப்புச் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. "சுல்தான் ஆணை குறித்து கேள்வி எழுப்புவது கண்டிக்கப்பட வேண்டும்" என்னும் தலைப்பிலான அந்தச் செய்தி, மலேசியாகினியை கண்டிக்கும் இரண்டு உட்பக்கக்…
கெராக்கான் மாநாட்டுக்கு முன்னதாக பதில்களை எதிர்பார்க்கிறார்கள் பேராளர்கள்
கெராக்கான் தேசியப் பேராளர் மாநாடு, இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வேளையில் பேராளர்கள் பலரும்- அரசியல் பார்வையாளர்களும்கூட -ஐந்து முக்கிய கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றனர்.கட்சி தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத்தெளிவான பதில்கள் கிடைப்பது அவசியம் என்பது அவர்களின் நினைப்பு. கட்சியின் முதல்-தவணை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கோ…
பொருளாதார சுதந்திர குறியீட்டில் மலேசியாவுக்கு விழுந்த அடி
இவ்வாண்டுக்கான பொருளாதார சுதந்திர அளவை மதிப்பீடு செய்யும் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 140 நாடுகளில் மலேசியா 78வது இடத்துக்கு தாழ்ந்து விட்டது. அரசாங்கத்தின் அளவு, வலிமையான பணத்திற்கான வாய்ப்புக்கள் ஆகியவை உட்பட பல துறைகளில் நாட்டின் அடைவு நிலை அந்தக் குறியீட்டில் மோசமாகப் பதிவாகியுள்ளதே அதற்குக் காரணம் ஆகும்.…
உள்ளடக்கம் வலுவாக இல்லாவிட்டால் எந்த முயற்சியும் விரயமே
"நல்ல ஆளுமையே நாட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதற்குச் சிறந்த, குறைந்த செலவைக் கொண்ட வழியாகும். நாட்டுக்கு அவமானத்தைத் தரக் கூடிய பல விஷயங்கள் இருக்கும் போது நமது தோற்றத்தை மேம்படுத்த பெரும் பணத்தைச் செலவு செய்வதில் எந்த நன்மையுமில்லை." நாட்டின் தோற்றத்தை மேம்படுத்த எப்பிசி-க்கு 84 மில்லியன்…
சுஹாகாம் விசாரணையில் மாட் சாபு சாட்சியமளிக்கிறார்
பெர்சே 2.0 பேரணி நடந்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நடத்தும் விசாரணையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு சாட்சியம் அளிக்கவிருக்கிறார். இதனை அவரது வழக்குரைஞர் முகமட் ஹனிபா மற்றும் பெர்சே 2.0 இன் வழிகாட்டல்…
கம்போங் பாரு மசோதாவை பேரரசரிடம் கொண்டு செல்ல பக்கத்தான் திட்டமிடுகிறது
கம்போங் பாரு மேம்பாட்டு கார்ப்பரேசன் மசோதா 2010 வைத் தடுத்து நிறுத்தும் இறுதி முயற்சியாக பேரரசர் மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஆகியோரின் தலையீட்டை பெற பக்கத்தான் ரக்யாட் ஆலோசித்து வருகிறது என்று அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். "மலாய்க்காரர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த மசோதாவை தாமதப்படுத்துவதற்கு அகோங்…
பிரதமரின் கஸாக்ஸ்தான் வருகையின் செலவு ரிம1 மில்லியன்
இவ்வாண்டு ஜூன் மாதம் பிரதமர் நஜிப் கஸாக்ஸ்தானுக்கு மேற்கொண்ட வருகைக்கான செலவு ரிம1 மில்லியன் என்று வெளிவிவகார அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பிரதமரும் அவரது பரிவாரமும் கஸாக்ஸ்தானில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தங்கில் கலந்துகொண்டதற்கான மொத்த செலவு ரிம1,072,213.22 சென். இந்தக் கருத்தரங்கின் போது மலேசியா…
பிரதமரின் பெர்த் பயணம் தனிப்பட்ட முறையிலானது
மெர்தேகா தினத்தன்று அரசாங்க விமானம் ஒன்றில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது தனிப்பட்ட முறையிலானது என இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. "ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரையிலான அந்தப் பயணம் அவரது தனிப்பட்ட பயணம்", என வெளியுறவு அமைச்சு, பிகேஆர் பத்து…
என்ஜிஒ: மதம் மாற்ற முயற்சிக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய நன்றி தெரிவிக்கும் விருந்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முஸ்லிம் அரசு சாரா அமைப்பு ஒன்று கோரியுள்ளது. போதுமான ஆதாரம் இல்லாததால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும் அந்த நிகழ்வில் முஸ்லிம்களுடைய நம்பிக்கைகளையும்…
எம்டியூசி நவம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் மறியலை நடத்தும்
கடந்த வாரம் மக்களவை ஏற்றுக் கொண்ட வேலை வாய்ப்புச் சட்டத் திருத்தங்களை எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வன்மையாக ஆட்சேபிக்கிறது. அந்தத் திருத்தங்களை நிராகரிப்பதற்காக காரணங்களை விளக்கி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அது கடிதம் எழுதும் என எம்டியூசி தலைவர் முகமட் அலி அத்தான் கூறினார்.…
எச்ஆர்பி, பதிவு மீது நீதித்துறை மறு ஆய்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கிறது
ஹிண்ட்ராப் அமைப்பின் அரசியல் களமான மலேசிய மனித உரிமைக் கட்சி, ஒர் அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்து கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் நிராகரித்ததை, நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி மீண்டும் விண்ணப்பம் செய்து கொண்டுள்ளது. இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட அந்த…
காலிட்: கருத்துவேறுபடுவது இயல்பானதே
சில முடிவுகள் தப்பாக போனதற்காக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதெல்லாம் எல்லா நிறுவனங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான் என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம். “ஒரு நிறுவனம் என்றால் சிலர் ஒத்துப்போவார்கள், சிலர் ஒத்துப்போக மாட்டார்கள். “அதைப் பற்றிப் பரவாயில்லை. நம் போராட்டத்தைத் தொடர்வோம்”. அந்தாராபோஸ்…
பிகேஆர்: பட்ஜெட் பலவீனத்தை மூடிமறைக்க புதிய ‘வீடியோ’
பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் புதிய வீடியோ ஒன்று வலம்வந்துகொண்டிருப்பதைக் கண்டித்த அக்கட்சி அது, 2012 பட்ஜெட்டில் உள்ள பலவீனங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சி என்று வருணித்துள்ளது. “ஜோடிக்கப்பட்ட வீடியோக்களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதன்வழியும் இடமளிப்பதன்வழியும்” அரசு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்று…
ஆயர்: ஹசான் “மிகவும் கவனக் குறைவாக” இருந்துள்ளார்
சிலாங்கூரில் சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சி மன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் ஹசான் அலி, "மற்றவர்கள் தவறு செய்வதாக சாடும் போது ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் என்ற முறையில் சந்தேகத்துக்குரிய ஆதாரங்களை நம்பக் கூடாது", என கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ இங் நினைவுபடுத்தியுள்ளார். கடந்த…
உலக அளவில் மலேசியாவின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட எப்பிசிக்கு 20 மில்லியன்…
அரசாங்கம், 2007 தொடங்கி மூன்றாண்டுக்காலத்துக்கு ஊடக ஆலோசனை நிறுவனமான எப்பிசி மீடியாவுக்கு 19.6மில்லியன் இரோ வழங்கியது. அது “தொடர்புத்துறையில் ஆலோசனைக்காகவும் சேவைகளுக்காகவும் அறிவுரைகளுக்காகவும்” கொடுக்கப்பட்ட கட்டணம் என்று பிகேஆர் பத்து தொகுதி எம்பி தியான் சுவாவுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த மறுமொழ்யில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டிருந்தார். “அந்நிறுவனத்துடன்…
இசா பெல்டா கூட்டுறவுத் தலைவராக தகுதியில்லையா?
இசா சமட், பெல்டா குடியேற்றவாசிகள் கூட்டுறவு(கேபிஎப்)த் தலைவராக நியமனம் செய்யப்பட்டது ‘சட்டவிரோதமானது’ என்றும், அவருக்கு அதில் உறுப்பியம்பெறும் தகுதிகூட இல்லை என்றும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் கூறுகிறார். அந்தத் தோட்டத்தொழில் நிறுவனத்தின் உள்வட்டாரங்களை மேற்கோள்காட்டிப் பேசிய சைபுடின், கூட்டுறவின் விதிமுறைகளைக் கருத்தில்கொள்ளாது கேபிஎப் இயக்குனர் வாரியம்…
டிஏபி: தேர்தல் ஆணைய விதி முறை திடீரென மாற்றப்பட்டதால் வாக்காளர்…
இசி என்ற தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவுக்கான விதிமுறை திடீரென மாற்றியிருப்பது குறித்து டிஏபி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த புதிய விதிமுறை 'நியாயமற்றது' என்றும் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் தனது முயற்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அது கூறியது. திடீரென் விதிமுறை மாற்றப்பட்டதால் 500 புதிய பதிவுகள்…
தீபாவளிக்கு முதல் நாளும் நாடாளுமன்றம் கூடுவது மீது அதிருப்தி
தீபாவளிக்கு முதல் நாளன்று அதாவது அக்டோபர் 25ம் தேதியும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் அக்டோபர் 26ம் நாள் 'திறந்த இல்ல உபசரிப்பை' நடத்துவதற்கான தங்களது ஏற்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் வழக்கமாக தீபாவளிக்கு முதல் நாள் நடத்தப்படும் முன்னோர்…
பெர்சே விசாரணை: “போலீஸ், மாது ஒருவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது”
பெர்சே 2.0 பேரணி தொடர்பான பொது விசாரணை தொடங்கியுள்ளது. ஜாலான் துன் சம்பந்தனில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் போலீசார் மாது ஒருவரை முரட்டுத்தனமாக தரையில் தள்ளியதை தாம் பார்த்ததாக சாட்சி ஒருவர் கூறியிருக்கிறார். கென்னத் சான் வென் சின் என அடையாளம் கூறப்பட்ட அவர், விசாரணையை…