இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், பினாங்கில் உள்ள தெலுக் பஹாங் மற்றும் ஆயர் இடாம் அணைகளின் நீர்மட்டம் குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, தெலுக் பஹாங் அணையின் நீர்மட்டம் 47.3 சதவீதமாக இருந்தது, இது ஆண்டின்…
பெர்சே அதன் நிதிமூலங்களைத் தெரிவிக்கத் தயார்
அரசாங்க ஆதரவாளர்களால் வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெர்சே 2.0, அதன் நிதிமூலங்களைத் தெரிவிப்பதற்குத் தயாராகவுள்ளது. கடந்த வாரம் மலேசியாகினியின் நேர்காணல் ஒன்றில் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், ஜூலை 9 பேரணி, மலேசியர்களின் நிதியுதவி கொண்டு நடத்தப்பட்ட மக்கள் இயக்கமாகும் என்றார். “பேரணி முழுக்க…
பள்ளிவாசல் ஒலிபெருக்கி மீது பினாங்கு விதித்துள்ள தடையை பெர்லிஸ் ஆதரிக்கிறது
வைகறையின் போது பள்ளிவாசல் அல்லது சூராவ் ஒலிபெருக்கிகள் மூலம் திருக்குர் ஆன் போதனைகளை ஒலிபரப்பும் நடைமுறை முகமது நபியின் போதனைகளுக்கு முரணானவை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார். "வைகறைக்கு முன்னதாக ஒலிபெருக்கியின் அளவைக் கூட்டுவது முகமது நபியின் போதனைகளுக்கு எதிரானது. ஏனெனில் அது இன்னும் உறங்கிக்…
அம்னோ தலைவர்: பெர்சே பேரணி லண்டன் கலவரங்களைப் போன்றதல்ல
பெர்சே 2.0 பேரணி லண்டனில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்த கலவரங்களைப் போன்று மாறியிருக்கக் கூடும் என்ற அரசாங்க நிலையிலிருந்து உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா மாறுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது. "நான் சட்டவிரோதக் கூட்டங்களை ஒப்புக் கொள்ளவில்லை. என்றாலும் பெர்சே கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளாமலும் இல்லை. அத்துடன்…
வழக்குரைஞர் மன்றம் தாஜுடின் விவகாரத்தில் ஜிஎல்சி-க்களை எச்சரிக்கிறது
தாஜுடின் ராம்லியுடனான விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணும் போது ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநர் வாரிய உறுப்பினர்கள், தங்களது கடமைகளைச் செய்ய தவறி விட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் கவனக் குறைவாக இருந்ததற்காக நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என வழக்குரைஞர் மன்றம் எச்சரித்துள்ளது. ஒரு…
பக்காத்தான் பெரிய வெற்றி பெறும் என்ற ஆரூடம் தவறானது என்கிறார்…
அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் 100 நாடாளுமன்ற இடங்களை வெல்லும் என முடிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வழி முறை தவறானது என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதீன் கூறுகிறார். Read More
அரசாங்கம்: மலேசியா, உலக அளவிலான பேச்சு சுதந்திர தரத்தை பூர்த்தி…
மலேசியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பேச்சு, தகவல் சுதந்திரம் அனைத்துலகத் தரங்களுக்கு இணையானது என அரசாங்கம் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கூறியுள்ளது. கடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்பிக்கப்பட்ட 2010ம் ஆண்டுக்கான சுஹாக்காம் அறிக்கைக்கு அரசாங்கம் அளித்துள்ள 69 பக்க பதிலில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்,…
பிகேஆர்: இணையத்தளங்களுக்கு எதிரான எஸ்ஸாமின் மிரட்டல் ஒரு குற்றச்செயலாகும்
செனட்டர் எஸ்ஸாம் முகம்மட் நோர், இணையச் செய்தித்தளங்களைக் கொளுத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருப்பது ஒரு “குற்றச் செயல்” என்றும் அவருக்கு எதிராக போலீசும் சட்டத்துறை தலைவரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். “மேலவை உறுப்பினர் ஒருவர் இப்படிப் பேசியிருப்பதையும் குற்றச்செயல்களில்…
இண்ட்ராபின் பிரிட்டிஷ் வழக்குரைஞர் நாடு கடத்தப்பட்டார்
மலேசியாவில் இந்திய-மலேசியர்கள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுவது சரியா என்பதைக் கண்டறிய வந்த பிரிட்டிஷ் வழக்குரைஞர் இம்ரான் கானைக் குடிநுழைவுத்துறை நாட்டை விட்டு வெளியேற்றியது. இரண்டாவது தடவையாக வெளிநாட்டு வழக்குரைஞர் ஒருவர் இவ்வாறு நாடு கடத்தப்படுகிறார். கடந்த மாதம், ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழல் வழக்கில் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரெஞ்ச் வழக்குரைஞர் கேஎல்ஐஏ…
இசி அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தவும், காரணம் சொல்லக் கூடாது
உங்கள் கருத்து: "மை கார்டு எண்களைப் பாருங்கள் அந்த மூன்று விஷயங்களிலும் ஒரே ஒரு இலக்கம் மட்டும் மாறியிருக்கிறது. அது தவறு அல்ல. திட்டமிடப்பட்ட மோசடி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது." "படியாக்கம்' செய்யப்பட்ட வாக்காளர்கள் அம்னோ உறுப்பினர்கள்" ஹலோ: தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல்…
இணையத்தளங்களைத் “தீக்கிரையாக்குவோம்”, மிரட்டுகிறார் செனட்டர் எஸ்ஸாம்
இஸ்லாத்தை தற்காக்க தாம் போராடப்போவதாக அம்னோ செனட்டர் முகமட் எஸ்ஸாம் முகமட் நூர் இன்று (ஆகஸ்ட் 12) கூறினார். அப்போரில் இஸ்லாத்தின் எதிரிகளின் முகவர்களாக செயல்படும் செய்தி இணையத்தளங்களும் அடங்கும் என்று அவfர் கூறிக்கொண்டார். "சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகவுக்கு (ஜயிஸ்)எதிரான பண்பற்ற நடத்தையை அவர்கள் (இஸ்லாத்தின் எதிரிகள்)…
ரோஸ்மா: என்னை அச்சுறுத்தாதீர், மிஸ்டர் கர்பால் சிங்
பிரதமர் நஜிப்பும் அவருடைய மனைவி ரோஸ்மாவும் தாங்கள் குதப்புணர்சி II வழக்கில் அன்வார் இப்ராகிமின் சாட்சிகளாக இருக்க விரும்பவில்லை என்று அவர்களைப் பேட்டி கண்ட அன்வாரின் வழக்குரைஞர்களிடம் கூறினர். இத்தகவலை எதிர்தரப்பின் தலைமை வழக்குரைஞர் கர்பால் வெளியிட்டார். அதே தகவலை சங்கராவும் தெரிவித்தார். "பேட்டி அளிக்கும் அறைக்கு முதலில்…
நஜிப்பும் ரோஸ்மாவும் பேட்டியளிக்க நீதிமன்ற கட்டடத்திற்கு வந்தனர்
குதப்புணர்ச்சி II வழக்கில் அன்வார் இப்ராகிம்மை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களுக்கு பேட்டி அளிப்பதற்காக பிரதமர் நஜிப்பும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் ஜாலான் டூத்தா நீதிமன்ற கட்டடத்திற்கு வந்தனர். பிற்பகல் மணி 2.55 க்கு அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். மலாக்கா முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட்…
படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் அம்னோ உறுப்பினர்கள், பாஸ் கண்டுபிடிப்பு
வாக்காளர் பட்டியலில் இரண்டு தடவை வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் சிலர், அம்னோ உறுப்பினர்கள் என்பதை பாஸ் கண்டுபிடித்துள்ளது. இதனால் ஆளும் கட்சி இந்த மோசடிக்குப் பின்னணியில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் கயாட், படியாக்கம் செய்யப்பட்ட மேலும் மூவரின் பெயர்கள் இன்னமும் வாக்காளர்…
வாக்காளர் மிஸ்மா கண்டுபிடிக்கப்பட்டார்
நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்றிருந்தவர் என்றும் பின்னர் நான்கே மணி நேரத்தில் குடியுரிமை பெற்றவர் என்றும் கூறப்பட்ட மிஸ்மாவை ஊடகங்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளன. ஆனால் அவர், தமக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “எல்லாரையும்போல் நானும் சட்டத்தைப் பின்பற்றியே பெற்றேன். மற்றவர்கள் சொல்வதைப்போல் அல்ல”, என்று அவர்…
தேவாலயம்: ஜயிஸ் “முறையான அதிகாரமின்றி” நடவடிக்கை மேற்கொண்டது
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம்(டியும்சி), தங்கள் கட்டிடத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறை(ஜயிஸ்)“சட்டப்படி முறையான அதிகாரமின்றி” அதிரடிச் சோதனை நடத்தியதாகச் சாடியுள்ளது. “ஜயிஸும் போலீஸ் அதிகாரிகளும் வாரண்ட் இன்றி எங்கள் கனவு மையத்துக்குள் வந்தனர் என்பதைத் திரும்பவும் வலியுறுத்துகிறோம்”, என்று மூத்த பாதிரியார் டேனியல் ஹோ இன்று ஓர் அறிக்கையில்…
இந்தியர் நிலையைக் கண்டறிய பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் வருகை
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மறுபடியும் தொடுக்கப்படும் வழக்குக்காக இண்ட்ராப் ஏற்பாடு செய்துள்ள பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் இருவர், மலேசியர்களின் உண்மைநிலையைக் கண்டறிய இங்குள்ள இந்தியர்களைச் சந்திப்பர். வழக்குரைஞர்கள் இம்ரான் கான், சுரேஷ் குரோவர் ஆகியோரின் வருகை, மலாயாவுக்கு இந்தியர்களைத் தொழிலாளர்களாகக் கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னர் அவர்களை நிர்க்கதியாக விட்டுச்…
நுருல் இஸ்ஸா: டிஐஜிபி-யின் அறிக்கை அவரது “அறியாமையை” காட்டுகிறது
பெர்சே தேர்தல் சீர்திருத்தப் பேரணி தடுக்கப்படாமல் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் லண்டன் சாலைகளில் இப்போது நடக்கின்ற கலவரத்தைப் போன்று மாறியிருக்கும் என்று கூறியுள்ள துணை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் த்காலித் அபு பாக்காரை லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சாடியிருக்கிறார். "அந்த…
டியுஎம்சி-யை மூடப்போவதாக சொல்லப்படுவதற்கு எம்பிபிஜே மறுப்பு
டமன்சாரா உத்தாமா மெத்தடிஸ்ட் தேவாலயத்தை மூடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மறுக்கிறது. அதற்கான உத்தரவு எதனையும் தாம் பெறவில்லை என்று அதன் அமலாக்க மற்றும் பாதுகாப்புத் துறை துணை இயக்குனர் துன் முகமட் இஸ்லிசாம் பஹார்டின் தெரிவித்தார். “அதன் தொடர்பில் உத்தரவு எதுவும் இதுவரை…
அன்வார்: நிதி அமைச்சர் மட்டுமே GLCக்கு உத்தரவிட முடியும்
முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராக தாங்கள் சமர்பித்துள்ள எல்லா வழக்குகளையும் மீட்டுக் கொள்ளுமாறு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் வெளியிட்டதாகக் கூறப்படுவது மீது அவரை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குறை கூறியிருக்கிறார். அது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்…
மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகள் இன்று பேட்டி காணப்பட்டனர்
குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கக் கூடிய சாத்தியமுள்ளவர்கள் எனக் கருதப்படும் மேலும் இருவரை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் இன்று பேட்டி கண்டனர். அன்வாருடைய மெய்க்காவலர் மொக்தார் முஸ்தாபா, அவருடைய காரோட்டி அப்துல்லா சானி சைட் ஆகியோரே அவர்கள். வழக்குரைஞர்களான கர்பால் சிங்கும் சங்கர நாயரும் அவர்களை ஒரு மணி…
அரசாங்கக் கட்டிடங்களில் குளிர் சாதனங்களின் அளவை 24 டிகிரி செல்ஸியஸுக்கு…
எல்லா அரசாங்கக் கட்டிடங்களும் தங்களது குளிர் சாதனங்களின் அளவை 24 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே போகாமல் வைத்திருக்க வேண்டும் என்பது விரைவில் கட்டாயமாக்கப்படும். எரிபொருள் செலவுகளைக் குறைப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம் என்று எரிசக்தி, பசுமை தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய்…
ரசாலியின் அமானாவுக்கு பினாங்கு அம்னோவில் வரவேற்பில்லை
பினாங்கு அம்னோ, அண்மையில் தெங்கு ரசாலி தலைமையில் அமைக்கப்பட்ட அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) அங்காத்தான் அமானா மெர்டேகா(அமானா)-வை வரவேற்கவில்லை. அமானாவில் பெரும்பாலும் பாரிசான் நேசனல் உறுப்புக்கட்சிகளைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக இருப்பதால் அது பயனான அமைப்பாக செயல்பட இயலாது என்று நினைக்கிறார் புக்கிட் மெர்டாஜாம் அம்னோ தலைவர் செனட்டர் மூசா…
பக்காத்தான் கிராமப்புற மலாய்க்காரர்களைக் கவர வேண்டும்
பக்காத்தான் ரக்யாட் கிராமப்புற மலாய்க்காரர்களின் மனம் கவர வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அது, 13வது பொதுத்தேர்தலில் அதற்குப் பாதகமாக அமையும் என்கிறார் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி.ஜெயக்குமார். கிராமப்புற மலாய்க்காரர்கள் அம்னோவின் ‘ஊழல்கள்’ பற்றி அறியாதவர்கள் அல்லர். ஆனால், பக்கத்தானுக்கு…