“என்எப்சி குளறுபடி”க்கு விரைவில் தெளிவான விளக்கம்: தலைமைக் கணக்காய்வாளர்

கணக்காய்வுத் துறை, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி)  மீதான 2010 தணிக்கை அறிக்கை குறித்து  விரிவான விளக்கம் அளிக்கும் என்று தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் அவ்விளக்கத்தால் அந்த கால்நடை வளர்ப்புத் திட்டத்தைச் சூழ்ந்துள்ள நெருக்கடி குறித்து ஒரு தெளிவு ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.அம்ப்ரின்…

ABU செராமாவுக்கு இடையூறு தொடர்பில் ஒருவர் கைது

ABU எனப்படும் 'அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை' அமைப்பு கடந்த சனிக்கிழமை ஷா அலாமில் ஏற்பாடு செய்திருந்த செராமா நிகழ்வுக்கு இடையூறு ஏற்பட்டதின் தொடர்பில் போலீஸ் ஒருவரைக் கைது செய்துள்ளது. அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட…

NFC தாமதம் தொடர்பில் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் விலகவேண்டும்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது Read More

போலீஸ் சட்டத்துக்குப் பாதுகாவலன்; அம்னோவுக்கு அல்ல!

"நான் போலீசை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்." போலீஸ் ரௌடிக் கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது கூக்குரல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் பாதுகாவலன் என்று மட்டும் அது தன்னை…

போலீஸ், ரௌடி கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது

ABU எனப்படும் 'அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை' என்னும் அமைப்பு, கடந்த சனிக்கிழமை தான் ஏற்பாடு செய்திருந்த செராமா நிகழ்வை நிறுத்திய ரௌடி கும்பலுடன் 'போலீசும் ஒத்துழைத்ததாக' சந்தேகிக்கிறது. அந்தச் சம்பவம் மீது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் ABU வும் அந்த நிகழ்வின்…

கெடா எம்பியைப் பதவி இறக்க மாணவர்கள் சூளுரை

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசுக்குச் சொந்தமான உயர்க்கல்விக் கழகத்திலிருந்து ஐந்து மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்துச் செய்ய வேண்டும் இல்லையேல் அடுத்த பொதுத் தேர்தலில் அவரைப் பதவி இறக்குவோம் என்று  சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) எச்சரித்துள்ளது.  “உண்மைக்காகவும் உரிமைக்காகவும் போராடும்…

ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏர் ஏசியா மீது வழக்குத் தொடுத்துள்ளனர்

ஆசிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா தனது இணையத் தளத்தில் முழுக் கட்டண விலை விவரங்களை வெளியிடத் தவறியதாக அதன் மீது ஆஸ்திரேலிய அதிகாரிகள் வழக்குப் போட்டுள்ளனர். மலேசியாவை தளமாகக் கொண்ட அந்த விமான நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட், மெல்பர்ன், பெர்த் ஆகியவற்றிலிருந்து…

ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அவர்கள் மீது…

"அவர்கள் தவறு செய்திருந்தால் அவதூறுக்காக உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். விருப்பம் போல்  வாங்கலாம்." சிட்னியில் அளவு மீறி பொருட்களை வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா கறுப்பு மம்பா: ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சிட்னி மார்னிங் ஹெரால்ட் மீது வழக்குப் போடுங்கள்.  அது வெளியிட்ட செய்தி…

பிரதமர் இந்தியர்களை ஏமாளியாக்க தமிழ்ப்பள்ளிகளை பயன்படுத்தக் கூடாது, சேவியர்

தமிழ்ப்பள்ளிகள் மற்றும்  தமிழ்க் கல்வி மேம்பாடு குறித்துப் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுத்துள்ள அறிவிப்பு காலத்துடன் செய்யப்பட்டிருந்தால் வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எதிர்வரும் தேர்தலுக்கு முன், இந்தியர்களை ஏமாளிகள் எனக் கணக்கிட்டு தமிழ்ப்பள்ளிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கவர நினைப்பது   ஏமாற்றமளிப்பதாகவுள்ளது என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில…

மலிவு விலை வீடமைப்புத் திட்டம்: இந்திய தோட்டப் பாட்டாளிகளுக்கு இடமில்லையா?

நாட்டின் பட்ஜெட்டில் வரையறுக்கப்பட்ட மலிவு வீடமைப்புத் திட்டத்தில் ரிம5 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் எத்தனை விழுக்காடு இந்திய தோட்டப் பாட்டாளிகள் பயனடைந்துள்ளனர் என்று எழுத்துவடிவ கேள்வியை செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்தார். அக்கேள்விக்கு மனிதவள அமைச்சர் எஸ். சுப்ரமணியம் அளித்த பதில் இப்படி இருக்கிறது: 2011 ஆண்டிற்கான…

சொத்துக்கள் அறிவிக்கப்படுவதை மகாதீர் ஆதரிக்கிறார்

அரசாங்க அல்லது பொதுப் பதவிகளை வகிக்கின்றவர்கள் தங்களது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறார். ஆனால் சொத்து விவரங்கள் "சுயேச்சையான அமைப்பு" ஒன்றிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரை செய்கிறார். "அரசியல் நோக்கங்களுக்கு அந்த விஷயத்தைப் பயன்படுத்தாத ஒர் அமைப்பிடம் சொத்துக்களை அறிவிப்பது நல்லதாக இருக்கும்," என…

அடுத்த பினாங்கு பிஎன் தலைவர் குறித்து கோ மௌனம் சாதிக்கிறார்

கெரக்கான் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் அடுத்த பினாங்கு பிஎன் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற ஊகங்கள் பற்றிக் கருத்துரைக்க கெரக்கான் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார். அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிஎன் கூட்டணித் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்…

“கடல் நாக ஆண்டு திருப்பு முனையாகும்”

மலேசிய சீனர்கள் கடல் நாக ஆண்டைக் கொண்டாடும் வேளையில் அவர்களுடைய எதிர்காலம் ஒர் திருப்பு முனையில் இருப்பதாக பாண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார். "சீன வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு கடல் நாக ஆண்டு சிறந்த நேரம் எனக் கருதுகின்றனர்," என…

சிட்னியில் அளவுமீறி பொருள்வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவீயார் ரோஸ்மா மன்சூர், அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் விடுமுறை கழிக்கச் சென்றிருந்தபோது பொருள்களை மிதமிஞ்சி வாங்கிக் குவித்தார் என்று கூறப்படுவதை நிராகரித்தார். “அது அபத்தம், மிகைப்படக் கூறப்பட்டிருக்கிறது.அதில் உண்மை இல்லை”, என்றாரவர். இன்று, கோலாலம்பூரில் மசீச-வின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில்…

பகாங்கில் எதிர்த்தரப்பிடம் உள்ள இடங்களை பிஎன் கைப்பற்றும்

பகாங் பாரிசான் நேசனல் (பிஎன்), 13வது பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில் எதிர்த்தரப்பிடம் உள்ள அத்தனை இடங்களையும் கைப்பற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. மந்திரி புசார் அட்னான் யாக்கூப் இவ்வாறு கூறியுள்ளார். நேற்றிரவு மூவாயிரம் பிஎன் மகளிர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், இப்போது திசைமாறி வீசத்தொடங்கியிருக்கும் அரசியல் காற்று…

லிம் கிட் சியாங்: மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்கள்

கடல் நாக ஆண்டை மலேசியர்கள் வரவேற்கும் வேளையில் மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்களை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முன் வைத்துள்ளார். 1) கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் முறையீடு செய்து கொண்டது. …

அப்பட்டமான குண்டர்தனத்தைப் பார்க்க போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா?

“இந்தப் போலீசார் என்றுதான் பொய் சொல்வதை நிறுத்துவார்கள்?இப்போதுதான் ஒன்று நடந்த மறுநிமிடமே இணையத்தளத்தில் இடம்பெற்றுவிடுகிறதே.” அம்னோ எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது விஜயன்: சிலாங்கூர் போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா அல்லது அறிவிலியா? காணொளியைப் பாருங்கள்.அதன்பின் அங்கே குழப்பம் விளைவிக்கப்படவில்லை; அச்சுறுத்தப்படவில்லை என்று கருத்துரைக்கலாம். இவ்வளவு நடந்திருக்க போலீஸ் எங்கு போனார்கள்? …

இண்ட்ராப் கூட்டத்தை கலைத்த அம்னோ ரவுடிகள்!

ரசாக்: நேற்று ‘அம்னோவை தவிர எதுவானலும் சரி’ என்ற கூட்டத்தைக் கலைத்த அம்னோ ரவுடிகள் பற்றி கோமாளி ஏன் கண்டம் செய்யவில்லை? கோமாளி: காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்தையும் கோமாளி வன்மையாக கண்டனம் செய்கிறேன். காந்தி படங்களை ஏந்தியும், வன்முறையைற்ற வகையில் இனவாதத்தை ஒழிக்க முற்பட்டுள்ள அமைப்புகளுடன் இணைந்து…

நஜிப் மசீச, கெரக்கான் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக்கட்சிகளான மசீச-வும் கெரக்கானும் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டார். ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச தலைமையகத்தில் நடத்தப்பட்ட மசீச திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும்…

பழனிவேல் இப்போது இந்திய விவகாரங்களுக்கான வழிகாட்டும் அமைச்சர்

இந்நாட்டின் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டும் அமைச்சராக பிரதமர் இலாகா அமைச்சரான ஜி.பழனிவேல் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். கோலாலம்பூர் எஸ்ஜேகே கின்றாரா தமிழ்ப்பள்ளியில் இன்று நடைபெற்ற மலேசிய தமிழ்ப்பள்ளிகள் சமூகத்தின் ஆண்டு கூட்ட நிகழ்ச்சியில் மஇகா தலைவருமான ஜி.பழனிவேலின் நியமனம் அறிவிக்கப்பட்டது. சமூகத்தை…

50-50 அல்ல, இடங்களை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு இன்னும் பிஎன்…

எதிர்க்கட்சிகள் வசம் இப்போது இருக்கும் மாநிலங்களை பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் கைப்பற்றுவதற்கு 50க்கு 50 வாய்ப்புக்களே உள்ளன என்று கூறப்படுவதை அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிடி நிராகரித்துள்ளார். குத்து மதிப்பாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஆய்வின் விளைவே அத்தகைய எண்ணம் என அவர் சொன்னார். "பிஎன்-னாக…