வரும் செவ்வாய்க்கிழமை மருந்து விலைக் காட்சிச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பது குறித்து மலேசிய மருத்துவ சங்கத்திடமிருந்து (MMA) காவல்துறைக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம் முகமதுவின் கூற்றுப்படி, அவர்கள் அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012 இன் படி அறிவிப்பைப்…
த ஸ்டார் நாளேட்டின்மீது அரசின் நடவடிக்கை நியாயமற்றது
ஆங்கில நாளேடான த ஸ்டாரில் நிகழ்ந்த ஒரு தவற்றுக்காக அரசாங்கம் அதன் விரிவான அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நாளேட்டிடம் கெடுபிடி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுயேச்சை இதழியல் மையம்(சிஐஜே) கேட்டுக்கொண்டிருக்கிறது. “அமைச்சின் தலையீடும் ஆகஸ்ட் 12-இல் அச்செய்தித்தாள் வெளியிட்டிருந்த மன்னிப்பை அது நிராகரித்த விதமும் பொருத்தமற்ற செயலாகும். அது,…
இடைநீக்கம் செய்யப்பட்ட மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர்: ‘நான் முறையீடு…
மஇகாவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களை கட்சி மீண்டும் சேர்த்துக் கொண்டதற்காகக் கட்சித் தலைமைத்துவத்தை குறை கூறியதற்காக நேற்று தொடக்கம் 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர் சி சிவராஜா, தாம் அடுத்த வாரம் முறையீடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். Read More
அரசாங்கம், தேர்தல் சீர்திருத்தங்களைத் தன்னால் முடிந்த அளவுக்குச் செய்யும், பிரதமர்
நாட்டில் தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த நோக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அமைக்க ஒப்புக் கொண்டது என்றும் அது தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதைக் காட்டுகிறது என்றும்…
தேர்தல் மோசடி: ஆனால் டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஒன்றுமே…
"மகாதீர் அவர்களே, தாங்கள் தோல்வி செய்வதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வேலை செய்தன. அது உங்களுக்குத் தெரியும். என்றாலும் அவை அவ்வாறு செய்வதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். நல்ல நியாயம் தான்." மகாதீர்: தில்லுமுல்லுகளில் எதிர்க்கட்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளன பென் கோர்: "என்னுடைய காலத்தில் எதிர்க்கட்சிகள்…
பினாங்கு டிஎபி தலைமையகம் சந்தேகத்துக்குரிய தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்கானது
பினாங்கில் உள்ள அந்த மாநில டிஎபி தலைமையகத்தின் மீது நான்கு நாட்களுக்கு முன்பு சிவப்புச் சாயம் வீசப்பட்டது. இன்று அதிகாலை மணி மூன்று அளவில் அந்தக் கட்டிடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கை அடுக்குகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More
‘அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சீர்திருத்தங்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் நிறைவு பெற வேண்டும் என அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முடியாது என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். Read More
இப்போது ‘இல்லாத மை கார்டு குறியீட்டு எண்களுடன்’ வாக்காளர்கள்
தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்து பிஎன்னும் பக்காத்தான் ராக்யாட்டும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள வேளையில் வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் மேலும் பல குளறுபடிகளை அரசியல் கட்சிகளும் பொது மக்களும் அம்பலப்படுத்தியுள்ளனர். Read More
முன்னாள் ஐஜிபி கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தார்
முன்னாள் ஐஜிபி மூசா ஹசான், அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் வழக்கின் முக்கிய விஷயங்களை தொட்ட பின்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து விட்டார். Read More
இசி: பிஎஸ்சி-இல் பெர்சே 2.0 இடம்பெறக்கூடாது
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் பெர்சே 2.0க்கு இடமளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணைய(இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அக்குழுவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்றவர் கூறியதாக மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் செய்தி…
மாற்றரசுக் கட்சிகளும் தேர்தல்”தில்லுமுள்ளு” செய்ததுண்டு
மாற்றரசுக் கட்சிகளும் தேர்தலில் தில்லுமுள்ளு செய்ததுண்டு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார். “நான் பிரதமராக இருந்த காலத்தில் மாற்றரசுக் கட்சியும் அப்படிப்பட்ட தந்திரங்களில் ஈடுபட்டதுண்டு. ஒருமுறை ஒரே வீட்டிலிருந்து 50 பேர் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டிருந்தனர். “எப்படி என்று தெரியவில்லை. ஆனால், அத்…
நஸ்ரி: பிஎஸ்சி மூலம் புதிய தேர்தல் சட்டம் உருவாகலாம்
நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி), அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் சுதந்திரமான நியாயமான ஜனநாயக நடைமுறையை உறுதிப்படுத்த புதிய தேர்தல் சட்டமொன்றை உருவாக்குவது பற்றி ஆராயும் எனப் பிரதமர்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறுகிறார். “தேர்வுக்குழு, தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்த பின்னர் தேர்தல் ஆணையத்துடன்(இசி) கலந்துபேசி சில…
பெர்சே “சட்ட விரோதமானது”: ஆட்சேபங்கள் செப்டம்பர் 19ம் தேதி செவிமடுக்கப்படும்
பெர்சே 2.0ஐ சட்ட விரோத அமைப்பு என உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியதை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபங்களை செவிமடுப்பதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 19ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. Read More
அம்னோ வரலாற்றில் வெளிப்படையாக விலகிச் செல்லும் துணைப் பிரதமர்
"முஹைடின் நஜிப்பைக் காட்டிலும் வலுவானவராகத் தெரிகிறார். ஏனெனில் நஜிப் எதனைச் சொன்னாலும் அதற்கு முஹைடின் ஆதரவு அளிப்பதாகவே தோன்றவில்லை" Read More
‘தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான சுஹாக்காம் யோசனைகளை அமல் செய்க
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து மக்களுடைய கவனமும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு மீது பதிந்துள்ள வேளையில் 2007ம் ஆண்டு சுஹாக்காம் என்னும் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்த சீர்திருத்தங்கள் குறித்து வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தியுள்ளது. Read More
உங்கள் கருத்து: நஜிப் அவர்களே, முதலில் பெர்சே 2.0 இடம்…
"அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்பதை மெய்பிக்க நஜிப், பெர்சேயிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதே வேளையில் அம்பிகா தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு அழைக்கப்பட வேண்டும்." அன்வார்: தேர்தல் குழு "தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியைத் தவிர்க்கும்" தந்திரம் பல இனம்: பிரதமர் நஜிப்…
குதப்புணர்ச்சி வழக்கு II: முன்னாள் ஐஜிபி நாளை பேட்டி காணப்படுவார்
முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானையும் மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகளையும் நாளை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் பேட்டி காண்பர். Read More
துணைப் பிரதமர்: சீர்திருத்தக் குழு அமைவது, நடப்பு தேர்தல் முறை…
தேர்தல் சீர்திருத்தங்களை விவாதிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவது, இது வரை பின்பற்றப்பட்ட தேர்தல் நடைமுறை மோசமானது எனப் பொருள்படாது. மாறாக அதனை மேலும் சீர்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகும். இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். Read More
ஜயிஸ் சோதனை பற்றிய வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனையின் வீடியோ ஒளிப்பதிவின் சுருக்கம் இணையத்தில் கசிந்துள்ளது. Read More
நாடாளுமன்ற சிறப்புக்குழு நாளை கூடாது, நஸ்ரி
தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை நடைபெறாது என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்வழி நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதாக செய்த அறிவிப்பை அடுத்து உருவான குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. “நாளை நடப்பது…
சிறப்புக்குழு என்பது இசி-க்கு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு தந்திரம்
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தேர்தல் ஆணைய (இசி)த்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் சீரமைப்புக்காக நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்படுவதாக நேற்றிரவு அறிவிப்புச் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அக்குழு அமைக்கப்படுவதை பக்காத்தான் ரக்யாட் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறது என்றாலும் அரசாங்கம்…
பாஸ்- மெதடிஸ்ட் தேவாலயச் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
பாஸ் கட்சிக்கும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்திற்கும் இடையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு இன்னும் முடிவு செய்யப்படாத பின்னொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. "நேற்று அந்தத் தேவாலயம் கடிதம் ஒன்றின் மூலம் சந்திப்பைத் தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பிரச்னை பொது மக்களிடையே தீவிரமாக விவாதிக்கப்படுவது குறித்து அவர்கள்…
தாஜுடின் விவகாரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் ஜிஎல்சி-க்கள்
செல்வந்தரான தாஜுடின் ராம்லிக்கும் ஜிஎல்சி என அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான பல பில்லியன் ரிங்கிட் பெறும் வழக்குகளுக்கு உலகளாவிய தீர்வின் விவரங்கள் அவருக்கும் அம்னோ வழக்குரைஞரான முகமட் ஹாபாரிஷாம் ஹருனுக்கும் மட்டுமே தெரியும் எனத் தோன்றுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தாஜுடினுக்கு எதிரான வழக்குகள் முறையீட்டு…
அம்பிகா: நாடாளுமன்றக் குழுவில் பொது அமைப்புகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது ஓர் “ஆக்கப்பூர்வமான நடவடிக்கை” என்று வருணித்துள்ள பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அதில் பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தல்கள் சுயேச்சையாகவும்…