இஸ்மாயில் சப்ரி: 15-வது தேர்தல் அமைச்சரவையால் முடிவு செய்யப்படும்

நாடாளுமன்றத்தைக் கலைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் நடைமுறையின் அடிப்படையில், இது அமைச்சரவையில்தான்  முடிவெடுக்கப்படும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டா? அல்லது அதற்கு அடுத்த ஆண்டா?  பொதுத் தேர்தல் எப்பொழுது என்று கூற  அவர் மறுத்துவிட்டார், மக்கள் காத்திருந்து பார்க்க வேண்டும்…

மலாயா பல்கலைகழக தீ விபத்து – பதவி விலக கோரும்…

பல்கலைக்கழக குடியிருப்புக் கல்லூரி ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் பதவி விலக வேண்டும் என மலாயா பல்கலைக்கழக  மாணவர் சங்கம் (UMSU) தெரிவித்துள்ளது. மேலும், மாணவர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பல்கலைக்கழக நிர்வாகம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்…

ராட்ஸி: ஆசிரியர்களின் கணிப்புகள் மற்றும் முயற்சிகளை அமைச்சு கவனிக்கும்

ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து புதுமையான அணுகுமுறைகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தும், மேலும் அவற்றை மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் என்று மூத்த கல்வி அமைச்சர் முகமது ராட்ஸி ஜிடின்(Mohd Radzi Jidin) கூறினார். பொதுவாக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் புதுமைகளும் முயற்சிகளும் அவர்களின் பள்ளிகளில் மட்டுமே…

பிகேஆர் கட்சி தேர்தலில் பல பிரபலங்கள் பங்கேற்பு

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் 2025 ஆம் ஆண்டு வரையிலான  தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிகேஆர் தேர்தல் வெள்ளிக்கிழமை தொடங்கியது, துணைத் தலைவர் பதவியில் போட்டியிடும் ரஃபிசி ரம்லி மற்றும் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் இருவரின் மீதும் பலர் ஆர்வம் செலுத்திவருகின்றனர். அன்வார் இப்ராகிம் தனது கட்சித் தலைவர் பதவியை போட்டியின்றி…

ஜனவரி முதல் 28,957 கை, கால் மற்றும் வாய் நோய்…

நாட்டில் கை, கால் மற்றும் வாய் நோய்களில் (HFMD) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஜனவரி முதல் நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் 28,95 தொற்றுகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு முழுவதும் 4,239 தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்று என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். எவ்வாறாயினும்,…

ஆசியான்-அமெரிக்க உச்சநிலை மாநாட்டில் பிரதமர் – தடைகளை உடையுங்களௌ லி…

ஆசியான் மற்றும் அமெரிக்கா ஆகியவை தடையற்ற உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதிற்கு  உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெள்ளிக்கிழமை, அங்கு நடந்த ஆசியான்-அமெரிக்க சிறப்பு உச்ச மாநாட்டில் கருத்துரைத்தார். சுகாதார பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் மீட்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்…

கோரமான சாலை விபத்தில் பலியான அந்த 5 மாணவர்களின் விபரங்கள்

புதன்கிழமை இரவு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இறந்த போன மேலும் மூன்று பல்கலைக்கழக மாணவர்களின் அடையாளங்களை நிறுவ பல் பதிவுகள் காவல்துறைக்கு உதவியுள்ளது. கோலா கங்சார் காவல்துறைத் தலைவர் உமர் பக்தியார் யாக்கோப் அந்த  மூன்று மாணவர்களின் விவரங்களை வெளியிட்டார். அவை: சிலாங்கூர் கோலா…

குறைந்தபட்ச ஊதியம்: 5க்கும் குறைவான தொழிலாளர்கள் இருந்தால் ஆண்டு இறுதி…

ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய ஆணை 2022 ஐ இந்த ஆண்டு இறுதி வரை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக துணை மனிதவள அமைச்சர் அவாங் ஹாஷிம் (Awang Hashim) அறிவித்தார். எவ்வாறாயினும், வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற தொழில்சார் துறைகளில் ஈடுபட்டுள்ள முதலாளிகள்,…

பிறந்த மகனைக் கொன்ற இளம்பெண்ணுக்கு ஜாமீன்

புதிதாகப் பிறந்த மகனைக் கொன்றதாகக் கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பதின்ம வயதுப் பெண்ணின் விசாரணை முடிவடையும் வரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் யாக்கோப் முகமட்  சாம்(Yaacob Md Sam), அஹ்மத் நஸ்ஃபி யாசின்(Ahmad Nasfy Yasin) மற்றும் ஹாஷிம் ஹம்சா(Hashim…

மலேசியா- அமெரிக்கா கட்டாய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

அமெரிக்கா தனது சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலம் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து ஒருபணிக்குழுவை நிறுவுவதன் மூலம் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார். கட்டாயத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட தகவல்களைப்…

புலிகளை காப்பாற்றுவதற்காக 240 கிமீ நடைபயணாம்- பொதுமக்களும் பங்கேற்கலாம்

'புலிகளுக்காக ஒரு நடை' என்ற நீண்ட மற்றும் கடினமான பயணம் இன்று அதன் இறுதிப் பகுதிக்கு வரும், மேலும் 240 கிமீ நடைப்பயணத்தில் இறுதி 19 கிலோமீட்டரில் சேர பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதுவரை 215 கி.மீ தூரத்தை கடந்த நடிகை ஷரீபா சோபியா சையத் ஹுசைன்(Sharifah Sofia Syed…

கோவிட்-19 (மே 12): 3,410 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்

நேற்று 3,410 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,470,471 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 26,826 ஆக உள்ளன, மேலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ஏனெனில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை மீட்கப்பட்டவர்களின்…

நீதிபதி மீதான ஊழல் விசாரணை முறையா? என்ற வினாவின் விசாரணை…

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு எதிரான MACC விசாரணை தொடர்பான இரண்டு சட்டக் கேள்விகளை பெடரல் நீதிமன்றத்திற்குக் குறிப்பிடுமாறு இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் விண்ணப்பத்தை ஜூன் 23 அன்று விசாரிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நூரின் பதாருதீன் இன்று வழக்கு…

SOP: இரவு விடுதிக்கு செல்வதற்கு முன் கோவிட்-19க்கு சுய பரிசோதனை…

இரவில் நடனமாட விரும்புபவர்கள் கோவிட்-19 சோதனை முடிவையும், MySejahtera அப்ளிகேஷன்களையும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். இரவு விடுதிகள் அல்லது பப்களுக்குச் செல்பவர்கள் வளாகத்தில் நுழைவதற்கு 24 மணி நேரத்திற்குள் கோவிட்-19 சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மாற்றாக, வளாகங்கள் வருகையாளர்களிடம் சோதனைகளை நடத்தலாம். அவர்கள் கோவிட்-19 சோதனை எதிர்மறையாக…

2027 இல் மலேசியாவில் – தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு(SEAGF) மூலம் 2027 இல் 34வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளை நடத்த மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதாக மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் OCM தலைவர் நோர்சா ஜகாரியா தெரிவித்தார்.…

பாக்ஸ்லோவிட் எடுத்த 173  கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்தனர்

வைரஸ் தடுப்பு மாத்திரை பாக்ஸ்லோவிட் வழங்கப்பட்ட பின்னர் மே 9 ஆம் தேதி வரை மொத்தம் 173 கோவிட் -19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த மருந்து கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாக அவர்…

ரோஸ்மாவின் ஊழல் வழக்கின் தீர்ப்பு – ஜூலை 7-இல்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கு மீதான தீர்ப்பை ஜூலை 7ஆம் தேதி வழங்கப்படும் என்று  கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்தது. ரோஸ்மா ரிம187.5  மில்லியன் லஞ்சம் கேட்டதற்காகவும், Jepak Holdings Sdn Bhd நிர்வாக இயக்குனர் சைடி அபாங்…

வெப்பநிலை உயர்கிறது, ஜூலை முதல் செப்டம்பர் வரை மூடுபனி!

மூடுபனி (Haze) நிகழ்வுடன் வெப்பநிலையின் அதிகரிப்பு ஜூலை முதல் செப்டம்பர் வரை நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் வெப்பமண்டல புயல்கள், தீபகற்பத்தில் வறண்ட சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா (Muhammad…

கோவிட்-19 (மே 11): 3,321 புதிய நேர்வுகள், அதிகமானோர் மருத்துவமனையில்…

நேற்று 3,321 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 27 க்குப் பிறகு மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (1,220) கோலாலம்பூர் (573) நெகிரி செம்பிலான் (288) பேராக் (221) பினாங்கு (208) புத்ராஜெயா (182)…

பகடி வதை – ஏழு மருத்துவர்கள் மீது புகார்

அரசு மருத்துவமனைகளில் பகடி வதை  வழக்குகள் தொடர்பாக, ஏழு மருத்துவர்களின் பெயர்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவர்களின் பெயர்களை பினாங்கு மாநில சுகாதாரத் தலைவர் நார்லேலா அரிஃபின் இன்று சமர்ப்பித்துள்ளார், அதே நேரத்தில் இரு மருத்துவர்களின் பெயர்கள் நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை அதிகாரி எஸ்…

பிற கட்சிகளின் ஆதரவை அன்வாருக்காக நாடினேன் – சைபுடின்

2020ல் அன்வார் இப்ராகிம் பிரதமராக்கும்  முயற்சியில் பக்காத்தான் அல்லாத ஹராப்பான் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடியதில் தனக்கு வருத்தமில்லை என்று பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறியுள்ளார். ரபிஸி ரம்லியுடன் நடந்த விவாதத்தின் பொது அவர் இவ்வாறு கூறினார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப்…

மரபணு கண்காணிப்புக்கு மேலும் ரிம 15 மில்லியன்

SARS-CoV-2 மரபணு கண்காணிப்பு திட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்காக தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICK) கீழ் கூடுதலாக ரிம15 மில்லியன் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் (Mosti) தெரிவித்துள்ளது. மலேசியாவில் SARS-CoV-2 வைரஸ் வகைகளைக் கண்டறிந்து கண்காணிக்க SARS-CoV-2 மரபணு கண்காணிப்புத்…

செம்பணை எண்ணெய் புறக்கணிப்புக்கு தீர்வு காண தூதுக்குழு

மலேசியாவில் தோட்டப்புற தொழிலாளர்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்ற அனைத்துலக பிரச்சாரத்தின் எதிரிலியாக, மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் செம்பணை பொருட்களை தடை செய்ய கோரி உலக அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதன் விளைவாக மலேசியவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. பெருந்தோட்ட மூலப்பொருட்ட்கள் அமைச்சின் (Plantation Industries and Commodities Ministry (MPIC)…