ஹிம்புனான் ஹிஜாவ் டாட்டாரான் தடுப்புகளை மீறிச் செல்லாது

ஹிம்புனான் ஹிஜாவ் இன்றிரவு டாட்டாரான் மெர்டேகாவில் முகாமிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால், டாட்டாரானைச் சுற்றிலும் தடுப்புகள் போடப்பட்டிருப்பதால் அத்தடுப்புகளைத் தாண்டிச்செல்வதில்லை என அது முடிவு செய்துள்ளது. கோம்பாக், தாமான் மெலாவாரில் பாஸின் முன்னாள் தலைமையகத்தில் சுமார் 2,000 ஆதரவாளரிடையே பேசிய ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வொங் தாக், சட்டத்தைப் பின்பற்ற…

பினாங்கில் மத மாற்றத்துக்கு எதிரான பேரணி ஆயிரம் பேருடன் தொடங்கியது

கெப்பாளா பத்தாஸில் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த ஹிம்புன் பேரணி, சமய இசை நிகழ்ச்சிகளுடன் இன்று காலை தொடங்கியது. அதில் சர்ச்சைக்குரிய பல தலைவர்கள் தீவிரமான உரைகளை நிகழ்த்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. மலாய், ஆங்கிலம், தமிழ், சயாமிய மொழிகளில் இசை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.…

ஹிம்புனின் “ஒரு மில்லியன் மக்கள்” பேரணி பினாங்கிலும் நடத்தப்படும்

இஸ்லாத்தை வலுப்படுத்தவும் கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காக்கவும் முஸ்லிகளை கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றும் முயற்சிகளை முறியடிக்கவும் ஹிம்புன் (Himpun)என்ற முஸ்லிம் அரசு சாரா அமைப்பு பினாங்கு தலைத்தில் உள்ள கெப்பாளா பத்தாஸில் விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. ஹிம்புன் அமைப்பின் ஊடக தகவல் பிரிவுத் தலைவர் மான்சோ இப்ராஹிம்…

பேரணியில் சேர்ந்துகொள்க-முஸ்லிம் தலைவர்களுக்கு அறைகூவல்

அரசுசார்பற்ற அமைப்புகளின் கூட்டணியான ஹிம்புன், சனிக்கிழமை நடைபெறும் மதமாற்று-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளையும் தனிப்பட்டவர்களையும் குறிப்பாக அரசியல் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. பன்மைத்துவம் மிக்க மலேசிய சமுதாயத்தில் தங்கள் சமயத்தைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக எல்லாக் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களும் அப்பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று…

பெர்க்காசா தலைவர் பேரணியில் பேச்சாளர் இல்லை என்றாலும் அங்கு இருப்பார்

ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி என அழைக்கப்படும் மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு கொள்கின்றவர்களுடைய உணர்வுகளை ஏற்பாட்டாளர்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "நமது சமயத்தையும் இஸ்லாத்தின் புனிதத் தன்மையையும் தற்காக்கும் போராடும் போது அதனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்.…

பேரணி எதிர்ப்பு நிலையை அறிவித்த “துணிச்சலான மூவரை” ஆயர் பாராட்டுகிறார்

"கிறிஸ்துவ எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விட வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக விவேகமான முடிவை எடுத்துள்ள" பாஸ், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஆகியோரை கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் பாராட்டியுள்ளார். ஆசிய ஆயர்கள் மாநாட்டில்…