‘இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம்’ – அமைச்சர் ராஜித

rajitha_senarathneஇந்திய இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்திய மீனவர்கள் சுமார் 500 பேர்வரை இலங்கை கடற்பகுதிக்கு வந்ததாகக் கூறும் இலங்கை மீன் பிடி அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள், அப்படியாக வருபவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் நாள் தாங்கள் 5 பேரையும் பின்னர் நேற்று 25 பேரையும் கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தாம் நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் தாம் கைது செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சு வார்த்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் இலங்கை கடற்பரப்பிற்குள் யார் அத்துமீறி மீன்பிடித்தாலும் தொடர்ந்தும் அவர்களைக் கைது செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். -BBC

TAGS: