இந்திய வாக்காளர்களுக்கு நில விண்ணப்பங்கள்

borangபிஎன்னுக்கு நட்பான  கட்சி  ஒன்று  தெலோக்  இந்தான்  இந்திய  வாக்காளர்களுக்கு  நிலத்துக்கு  விண்ணப்பம்  செய்யும்  பாரங்களை  விநியோகித்ததாம். நாளைய  இடைத்  தேர்தலில்  பிஎன்னுக்கு  ஆதரவு  தேடுவதற்காக  அவ்வாறு  செய்யப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

இந்தியர்  முன்னேற்ற  முன்னணி (ஐபிஎப்)யைச்  சேர்ந்தவர்கள்  வீடு-வீடாகச்  சென்று  ஆதரவு  திரட்டியபோது  அந்த  விண்ணப்பப்  பாரங்களை  வழங்கினார்களாம்.

நிலங்களுக்கு  விண்ணப்பம்  செய்ய  விரும்புவோர் முதலில்  ஐபிஎப்  உறுப்பினராக  வேண்டும்.   உறுப்பினர்  ஆனதும் அவர்கள் விவசாயத்  திட்டத்தின்கீழ்  விவசாய  நிலத்துக்கு  விண்ணப்பம்  செய்தவர்களாகவும்  கருதப்படுவார்கள்  எனக்  கூறப்பட்டது.

மலேசியாகினி  இதை  உறுதிப்படுத்திக்கொள்ள   ஐபிஎப்-பைத்  தொடர்புகொண்டது.  ஆனால், இதுவரை  தொடர்பு  கிடைக்கவில்லை.