இலங்கை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது: சுப்பிரமணியன் சாமி

rajapaksa subramaniஇலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதாகவும், இது மிகவும் ஆபத்தானது எனவும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தீவிரவாதத்தை விரட்டியடிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியம்.

இதுதொடர்பாக இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும், பேச வேண்டும்.

பாகிஸ்தானியர்களால் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் ஊடுறுவி வருகிறார்கள்.

இது அபாயகரமானது. பாஜக, தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள்தான் என்றார்.

TAGS: