மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்க வேண்டும்: அமைச்சர் ராஜித சேனாரத்ன

rajith_senaratna_001அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலம் நாடு முன்னேற்றமடையும் எனவும் நாட்டை முன்னேற்ற சிறந்த முறை சமஷ்டி ஆட்சி முறை எனவும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற மாகாண மீன்பிடி அமைச்சர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், சமஷ்டி அரசியல் அமைப்பே சிறந்தது. அதிகாரங்கள் பரவலாக்கப்படும் போது நாடு முன்னேற்றமடையும். மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருந்து வருகிறேன்.

கருத்தரங்கில் சகல மாகாணங்களின் மீன்பிடி அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ள அமைச்சர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எனக்கு பரவாயில்லை. பணிகளை செய்ய வேண்டும் என்பதே எனது தேவை. தெரிவு செய்த மக்களுக்கு நாம் சேவையாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: