கோத்தபாய- இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு: இராணுவ உறவு பற்றிக் கலந்துரையாடல்

gota_indian_airmarshel_met-001இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அருப் ராஹா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், நேற்றுக் காலையில், இலங்கை விமானப் படைத் தலைமையகத்துக்கு சென்றிருந்தார்.

விமானப் படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரைச் சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார்.

இதன்போது, இரு தரப்பு இராணுவ உறவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இச் சந்திப்பை நினைவு கூறும் முகமாக பாதுகாப்புச் செயலாளரும் இந்திய விமானப்படைத் தளபதியும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவையும், இந்திய விமானப்படைத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

TAGS: