ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில்…

ltte_logoஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம், மலேசிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களின் ஆள் அடையாள விபரங்களை இலங்கை அரசாங்கம் மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு பதுங்கு குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து குறித்த புலி உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த ஏழு பேரும் ஆயுதம் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இரண்டு பேர் விமானிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. -Tamilwin

TAGS: