விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

katunayaka_airport001விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவிலிருந்து இலங்கை வந்த விமானப் பயணி ஒருவரே விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளையன் ராசகுமார் என்ற பெயருடைய இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் என்று பாதுகாப்புப் படையினரால் இனம் காணப்பட்டிருந்தார்.

எனினும் இறுதி யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடையவோ, புனர்வாழ்வு பெறவோ முன்வராது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: