டெல்லிக்கு போனார் விக்கினேஸ்வரன்! ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ மாநாட்டில் பங்கேற்பு!!

vikkkஇந்தியாவை மையமாக கொண்ட ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ புதுடில்லியில் நடத்தும் சர்வதேச மாநாடு ஒன்றின் அரசியல் அமர்வினில் பங்கெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்றிரவு பயணமாகியுள்ளார்.அவருடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அந்த அமர்வில் விசேட உரையாற்றுகின்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கீழ் இயங்கும் உலக இந்து காங்கிரஸ் நாளை வெள்ளிக்கிழமை (21ஆம் திகதி), அடுத்தநாள் சனிக்கிழமை, அதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் புதுடில்லி அசோக் ஹோட்டலில் சர்வதேச இந்து மாநாட்டுத் தொடர் ஒன்றை நடத்துகின்றது. ஒரே கூரையின் கீழ், ஒரே சமயத்தில் ஏழு மாநாடுகள், 45 அமர்வுகளாக நடைபெறும்.

உலகெங்கும் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான பேராளர்கள் இந்த மாநாடுகளில் பங்குபற்றுகின்றனர். சுமார் இருநூறு அதிதிப் பேச்சாளர்கள் இந்த மூன்று நாள்களிலும், ஏக காலத்தில் நடைபெறும் பல்வேறு அமர்வுகளிலும் உரையாற்றுவர். உலக இந்து பெண்கள் மாநாடு, உலக இந்து ஊடக மாநாடு, உலக இந்து நிறுவகங்களின் மாநாடு, உலக இந்து அரசியல் மாநாடு, உலக இந்து இளைஞர்கள் மாநாடு, உலக இந்து கல்வி மாநாடு, உலக இந்து பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகிய ஏழுமே ஒரேசமயத்தில் – ஒரே கூரையின் கீழ் – நடைபெறுகின்றன.

இதில், இந்து அரசியல் மாநாட்டில் ‘தீவிர, சிக்கலான அரசியல் சூழ் நிலையில் கூட்டு எத்தனங்கள்’ என்ற தலைப்பில் ஓர் அமர்வுக்கே வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்கின்றார். அதில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்துரை வழங்குகின்றானரென தகவல்கள் தெரிவிக்கின்றன. -http://pathivu.com/

TAGS: