தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி – மனோகணேசன் குற்றச்சாட்டு

mano_ganeshan_4எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிப்பில் பங்குகொள்ளவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி, கிளநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை போன்ற மாவட்டங்களில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மாவட்டங்களின் தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை அச்சுறுத்தி வாக்களிப்பில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் இதனை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்களை எதிர்கட்சி செயல்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: