காணாமல் போன எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியைக் கைவிடும் நோக்கில் மலேசியாவுடனும் சீனாவுடனும் பேச்சுகள் நடத்தவில்லை என ஆஸ்திரேலியப் பிரதமர் வார்ரன் ட்ரஸ் விளக்கமளித்துள்ளார்.
அதன் தொடர்பில் பேச்சுகள் நடப்பதாக வெளிவந்த ராய்ட்டர்ஸ் செய்தியில் உண்மையில்லை என்றாரவர்.
“தேடலை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சு நடத்தவில்லை. தேடுவதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்”, என்றார் அவர்.
“விமானத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்”.
அதை 2015 மே மாதத்துக்குள் கண்டுபிடிக்காவிட்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகியவை பேச்சு நடத்தும் என்றாரவர்.
சட்டி சுட்டதடா, கை விட்டதடா!.