ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கவனம்

ranil_wickramasingheஇலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் சுடப்படுவர் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது.

லோக்சபாவின் பிரதிசபாநாயகரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்றக்குழு தலைவருமான எம் தம்பித்துரை இந்த பிரச்சினையை முன்வைத்தார்.

இலங்கையின் பிரதமர், இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று திரும்பிய பின்னரும் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் மத்திய அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதன்போது தம்பித்துரையின் கருத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

இந்தநிலையில் தாம் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உறுதியளித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: