சவால்கள், தடைகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல! மக்களை மீள்குடியேற்றியே தீருவோம்!- இரா.சம்பந்தன்

sambanthanசம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அது நடந்தே தீரும். எக்காரணம் கொண்டும் எமது முயற்சி தோல்வியுற நாம் விடப்போவதுமில்லை. விடவும் மாட்டோம். சவால்கள், தடைகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. நாம் முன்வைத்த காலை ஒருபோதும் பின் வைக்கப் போவதில்லை என்றும் அவர்  தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக சம்பூர் மக்களோ ஏனையவர்களோ சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

அரசாங்கம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக தீவிரமான முடிவுகளை மேற்கொண்டு அதை அமுல்படுத்த முன்வந்துள்ளது.

அதனால் சம்பூர் மீள்குடியேற்றத்தை விரைவில் செய்து முடிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அந்த விவகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் செய்விக்கும்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளை துப்பரவு செய்தவர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சம்பூர் மக்கள் தமது சொந்தக் காணியில் குடியேறுவார்கள். வர்த்தக வலயக் காணியில் மக்கள் குடியேற்றப்படுவதை தொடர்ந்து கடற்படை முகாமாகவுள்ள 237 ஏக்கர் காணியிலும் மக்கள் விரைவாக குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: