சிறுபான்மையின மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே மஹிந்த கூட்டணி அமைக்கின்றார்: சோபித தேரர்

Sobhitha-Thera-100x80மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினர் பழிவாங்கப்படுவார்கள். பழிவாங்கும் நோக்கில்தான் மஹிந்த கூட்டணி அமைத்துள்ளார் என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

வென்றெடுத்த ஜனநாயகத்தை காப்பாற்றுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் நியமனம் வழங்க இணங்கியமை தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே சோபித தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: