பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன 18 பேரடங்கிய ‘ஹராபான் பாரு’(புதிய நம்பிக்கை) அணி கட்சித் தலைவர்களிடம் அதிருப்தி அடைந்துள்ள உலாமாக்களை இன்று சந்திக்கிறது.
இந்த உலாமாக்கள், புதிய நம்பிக்கை புதுக் கட்சி அமைப்பதையும் டிஏபி-யுடனும் பிகேஆருடனும் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்குவதையும் ஆதரிக்கிறார்கள் என பாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா கூறினார். ஆனால், அவர் உலாமாக்களின் பெயர்களை வெளியிட மறுத்தார்.
“புதுக் கட்சி பற்றி ஹரி ராயாவுக்குப் பின்னரே தெளிவாக தெரிய வரும். இப்போது பல்வேறு தரப்பினரை இரகசியமாக சந்தித்து வருகிறோம். நோன்பு திறப்பு நிகழ்வுகளில் பொதுமக்களுடனும் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன”, என்றாரவர்.
வாழ்த்துக்கள்!
இது நடக்க வேண்டும், நடக்கும்.