தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தப் போவதில்லை: சிறிலங்கா

mahinda-amaraweeraதமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லைத் தாண்டி சட்டவிரோதமான முறையில் மீண்பிடியில் ஈடுபடுகின்ற நிலையிலேயே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு எல்லைத்தாண்டி வருகின்றவர்களை கைது செய்யாமல் இருக்க முடியாது.

இந்த கைதுகள் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மீனவர்களின் பிரச்சினை குறித்து உறுதியான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: