இறுதிப்போரில் 7000 பேரே மரணம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்

maxwel_001இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,

‘2011இல், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, இலங்கை இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.

பெரும்பாலும், 7000 இற்கும் அதிகமானோர் தான் கொல்லப்பட்டிருக்கலாம்.

போர்க்காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக எமது ஆணைக்குழு இதுவரை துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியவில்லை.

எனினும், ஐ.நா நிபணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று நிச்சயமாக 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.

அந்த அறிக்கையில் கூட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியாக கூறப்படவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது.

மோதல் பிரதேசத்தில் புள்ளிவிபரவியல் திணைக்களம் வீடு வீடாக நடத்திய கணக்கெடுப்பு மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளில்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,700 ஐ நெருங்கியதாக இருக்கலாம்.

எனினும், எமது ஆணைக்குழு இதபற்றிய துல்லியமான எண்ணிக்கை பற்றிய முடிவு எதற்கும் வரவில்லை. ஆனால் 40 ஆயிரம் என்பது மிகையான கணிப்பு’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: