தொடரும் மழையினால் யாழில் 51,000 பேர் பாதிப்பு!

rain-jaffnaநாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில் யாழ் மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 2,023 வீடுகள் மற்றும் சுமார் 51,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தவிர, நேற்றைய தினம் சுமார் 15 மாவட்டங்களில் மழை பெய்ததுடன் கடற்பிரதேசங்களில், மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக காலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

-http://www.puthinamnews.com

TAGS: