இலங்கை -இந்தியாவுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்! அமைச்சர் அர்ஜுன

ship_thuthukkudiஇலங்கை – இந்தியாவுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி  செய்திச்சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் நிலவிய காலகட்டத்துக்கு முன்னர் தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையே படகுப் போக்குவரத்து நடைபெற்றிருந்தது. ஏராளமான பயணிகள் இச்சேவையின் மூலமாக பயன் பெற்றிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இராமேஸ்வரம்- தலைமன்னார் மட்டுமன்றி, கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: