ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகிறார்! விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

husain_vikki_001எதிர்வரும் 2016ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார்.

எனினும் ஜெனீவாத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது.

இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன், வடக்கிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: