இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றமொன்றை அரசாங்கம் உருவாக்க முன்னரே போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்களை யஸ்மின் சூக்கா பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த தகவல்களை இலங்கையில் அமைக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தாருஸ்மான் குழுவிலும் இடம்பிடித்திருந்த சூக்காவின் கையில் ஐ.நா. ஆணைக்குழு குறித்த விபரங்களைக் கையளித்துள்ளமையானது சட்டவிரோதம் என்றும் சிங்கள ஊடகமொன்றின் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
அந்த தமிழ் வியாபாரியின் பெயரும் இருக்கவேண்டும் ….
இதெல்லாம் வீண். மக்கள் கொல்லப்படும்போது ஐநா என்ன பிடுங்கி கொண்டிருந்தது ? எல்லாம் முடிந்த பின் இந்த விசாரணை அந்த விசாரணை எல்லாம் வீனேதான்–ஒன்றும் நடக்காது. இஸ்ரேல் போல் ரகசிய படையை அமைத்து வேர் அறுக்க வேண்டும். மற்றது எல்லாம் வீண் . அத்துடன் இந்தியாவும் தமிழ் நாட்டு துரோகிகளும் -முதுகு எலும்பில்லா பிண்டங்களும் என்றுமே திருந்த மாட்டார்கள். ISIS சுக்கு உலக நாடுகளில் இருந்து எத்தனை தீவிரவாதிகள் உதவினார்கள்? தங்களின் உடன் பிறப்புகளை கொன்று குவிக்கும் போது பக்கத்தில் இருந்தும் என்ன சப்பிக்கொண்டிருன்தனர்? ஈன ஜென்மங்கள். எவனையும் நம்ப முடியாது–ஒபாமாவே மாற்றி பேசி கழுத்தறுத்த போது என்ன சொல்ல முடியும்– நம்முடைய சாபக்கேடு.
அமெரிக்காவுக்கு தேவை என்றால் இந்தியாவை நெருக்கத்தால் கொடுப்பான் , இந்தியா ஒப்புதல் கொடுத்தால் இலங்கை விடையத்தில் தலை இட மாட்டான் அமேரிக்கா ! 2009 முதல் அமெரிக்க செய்யும் சேட்டையை கவனித்து வருகிறேன் ! இலங்கை படுகொலையை துருப்பு சீட்டாக பயன் படுத்துகிறான் அமேரிக்கா ! சீன நாடு ஊடுருவல்களும் அமெரிக்காவுக்கும் பிடிக்ககவில்லை ! en thaai thamil கருத்து நன்று !
சீனாவிடம் பிச்சைகார இந்தியா வாங்கி கட்டும்போது ..ஈழ தமிழர்கள் யார் என்று தெரியும் …