முள்ளிவாய்க்கால் ஆவிகள் விரட்டுகிறது: மகிந்த வீட்டில் வெள்ளியன்று அகோரிகள் நடத்திய பூஜை

2009ம் ஆண்டு முப்படைகளின் தளபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ , போரில் வெற்றியீட்டினார். ஆனால் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகள் அவரை துரத்துவது நின்றுவிடவில்லை. 2017 வரை ஆட்சியில் இருக்கவேண்டிய அவர் 2015ம் ஆண்டு தேர்தலை அறிவித்து , அதில் தோற்றுப்போனார். அவர் தேர்தலில் தோற்றுப்போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பில்லி சூனியம், நாள் நட்சத்திரத்தில் அதிக நம்பிக்கை கொண்ட மகிந்த , தற்போது தன்னையும் தனது குடும்பத்தையும் ஆட்டிப்படைப்பது முள்ளிவாய்க்காலில் இறந்த போன நபர்களின் ஆத்மாக்கள் தான் என நம்ப ஆரம்பித்துள்ளார். இதனை யார் நம்பவைத்தார்களோ தெரியவில்லை.

ஆனால் இதனை சாட்டி தற்போது பணம் கறக்கும் விளையாட்டை, ஒரு குழு மிகவும் திட்டவட்டமாக செய்து வருகிறது. பதவி இழந்த மகிந்த தற்போது இந்தியா செல்வது கடினம். அதனால் இந்திய வாரணாசிப் பகுதியில் இருந்து சில அகோரிகளை வரவளைத்து , வீட்டில் விசேட பூஜைகளை நடத்தியுள்ளார் மகிந்தர். இது முன்னரும் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தேறியது. அது போக கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்ற ஒரு பூஜை மகிந்த வீட்டில் நடைபெற்றதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நமால் ராஜபக்ஷ தற்போது கைதாகலாம் என்று பேசப்படுகிறது. இதேவேளை யோசித ராஜபக்ஷ ஏற்கனவே உள்ளே இருக்கிறார். ஷிராந்தி மீது வழக்கு இருக்கிறது. இப்படி பெரும் இடியப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் மகிந்தவிடம் நிறையப் பணம் மட்டும் உள்ளது. இதனை ஏதாவது ஒரு வழியில் கறக்கவேண்டும் அல்லவா ? இதனால் தான் இவரைச் சுற்றியுள்ள சிலர் , இவருக்கு அடிக்கடி ஐடியாக்களை கொடுப்பது வழக்கம்.

ஆனால் முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் என்றுமே மகிந்தரை சுற்றித்திரிந்து பழிவாங்கும். எந்த அகோரி வந்து பூஜை நடத்தினாலும் அதில் இருந்து தப்ப முடியாது என்கிறார்கள் …சைவ சித்தாந்திகள்…

-http://www.athirvu.com

TAGS: