மாஃபியா ஸ்டைல் யாழ்ப்பாணம் : கஞ்சா – கட்டழகி – காரை நகர் விடுதி விபச்சார ஸ்தலங்கள் தான் இன்று

யாழ்ப்பாணம் தற்போது மாஃபியா ஸ்டைல் நகரம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ? ஆனால் அது தான் உண்மை. உலகில் உள்ள முன்னணி கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தும் இடங்களின் கேந்திர நிலையம் யாழ்ப்பாணம் தான். இங்கே தான் பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா வந்து இறங்கி. பின்னர் அங்கிருந்து பல சர்வதேச நாடுகளுக்குச் செல்கிறது. இதனை சிங்கள ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் நெறிப்படுத்தி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வல்வெடித்துறை, காங்கேசன் துறை என்று கரையோரப் பகுதி எங்கும் கஞ்சா வந்து சாக்குகளில் இறங்குகிறது.

பின்னர் அதனை பிரித்து எந்த நாட்டுக்கு அனுப்பவேண்டுமோ அங்கே அனுப்பி வைக்கிறார்கள். இது ராஜபக்ஷ காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்று. மைத்திரி வந்தால் நின்றுவிடும் என்று யாரவது நினைத்தால் அது முட்டாள் தனம் தான். ஏன் என்றால் கோடிக் கணக்கில் பணம் புரளும் பிசினசாக இது மாறி,  வேர் ஊன்றிவிட்டது. காரை நகரில் உள்ள விடுதிகளில் இந்தோனேசியப் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் ஆயுள்வேத மூலிகை தயாரிப்பவர்கள் என்றும். ஆயுள்வேத மசாஜ் செய்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்துமே பொய். அங்கே பெரும் விபச்சாரம் மட்டுமே நடைபெற்று வருகிறது.

ஒருவகையில் சோமாலிய கடத்தல் கும்பலும், இந்தோனேசிய கடத்தல் கும்பலும் மற்றும் இந்தியா கடத்தல் கும்பலும் இணைந்து நடாத்தும் பெரிய ஆப்பரேஷன் தான் யாழ் நகரில் நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்தில் A-கிளாஸ் (அதாவது பிரித்தானியாவில்) கூட கிடைக்காத ஹெரோயின் , அபின், ஓபியம் போன்ற விலைமதிப்பற்ற போதைப் பொருட்கள் கிடைக்கிறது. இதனைக் கையாளும் யாழ் இளைஞர்களுக்கு சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு எவ்வளவு கோடி என்றே தெரியாது. ஆனால் மாதம் ஒன்றிற்கு பல மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் வந்து செல்லும் இருடமாக யாழ் மாறியுள்ளது என்பது தான் ஆச்சரியமான விடையம்.

யாழில் சர்வ சாதாரணமாக நடக்கும் இந்த கடத்தல், யாழ் இளையோர்களை எங்கே இட்டுச் செல்லப்போகிறது என்று தெரியவில்லை. புலிகள் இருந்த காலத்தில் கள்ளு கூட குடிக்க முடியாத நிலை இருந்தது. இரவு 11.00 மணிக்கு கூட பெண்கள் தெருவில் நடமாடக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன ? தமது பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்பி படிக்கவைக்க யாழில் உள்ள பெற்றோர்கள் நாட்டம் காட்டி வருகிறார்கள் என்றால், நாம் அனைவரும் ஒன்றை சிந்தித்துப் பார்க்கவேண்டும் … அது ஏன் என்று  …

-http://www.athirvu.com

TAGS: