பொட்டு அம்மான் தொப்பி: லண்டனுக்கு வந்திறங்கிய சிங்கள புலனாய்வுக் குழு- அட்ரஸ் தேடி..

லண்டனுக்கு சிங்கள புலனாய்வுக் குழு ஒன்று அன் – ஆபிஷலாக(உத்தியோக பற்றற்ற முறையில்) வந்திறங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து, கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னாரில் இருந்து ஒரு பார்சல் ஒன்று கிருளப்பனையில் உள்ள கூரியர் நிலையம் ஒன்றுக்கு வந்துள்ளது. லண்டனில் உள்ள விலாசம் ஒன்றுக்கு இந்த பார்சல் செல்ல இருந்த நிலையில். தீடீரென அங்கே புகுந்த சிங்கள புலனாய்வாளர்கள், அந்த பார்சலை கைப்பற்றி எடுத்துச் சென்றார்கள். அதில் புலிகளின் அதி முக்கிய தலைவர்கள் பாவிக்கும் ஒரு தொப்பி மட்டும், ஒழுங்காக சீல் செய்யப்பட்ட முறையில் பார்சலில் இருந்துள்ளது.

உள்ளே காணப்பட்ட தொப்பியை நன்றாக பகுப்பாய்வு செய்த புலனாய்வுத்துறை. அதனை நோண்டி இறுதியாக சில தலை முடிகளை எடுத்துள்ளதாகவும். அதனை வைத்து டி.என்.ஏ பகுப்பாய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை பொட்டு அம்மானின் டி.என்.ஏ மாதிரி இதுவரை இலங்கை புலனாய்வுத் துறையிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கூறப்படும் பொட்டு அம்மானின் மகன் புதைக்கப்பட்ட இடத்தை கூட கண்டு பிடிக்க , இலங்கை புலனாய்வு துறை திட்டம் தீட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கே உள்ள சிறுவனின் எலும்புகளை எடுத்து தொப்பியில் காணப்பட்ட முடியோடு , டி.என்,ஏ யோடு ஒப்பிட்டு பார்க்க முடியும் அல்லவா.

இதேவேளை லண்டனுக்கு அது ஏன் அனுப்பப்பட இருந்தது ? என்றும் லண்டனில் அது வந்தடைய இருந்த முகவரியில் யார் இருக்கிறார்கள் ? அவர்களின் நடவடிக்கை என்ன ? என்று ஆராய சில சிங்கள புலனாய்வு குழு உறுப்பினர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுள்ளார்கள். இந்த தொப்பி விவகாரத்தில் சிங்கள புலனாய்வுத்துறை ஏன் இவ்வளவு அக்கறை எடுத்துள்ளது என்ற கேள்வி எழலாம். இறுதிவரை பொட்டு அம்மானின் உடலையோ இல்லை அவரின் எந்த ஒரு பொருட்களையோ இலங்கை ராணுவம் கைப்பற்றவே இல்லை. இதனால் அவர்களுக்கு கடந்த 7 வருடங்களாக , பெரும் சந்தேகம் ஒன்று இருந்து வருவது யாவரும் அறிந்த உண்மை. இதன் காரணமாகவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே சிங்களப் படை தற்போது லண்டன் வந்துள்ளது. ஆனால் லண்டனில் உள்ள அந்த வீட்டில் உள்ள நபர்கள் இதுவரை சும்மா இருந்திருக்க மாட்டார்கள். எஸ்கேப் ஆகி இருப்பார்கள்.

-http://www.athirvu.com

TAGS: