யாழிற்கு சென்ற அமெரிக்கப் பிரதிநிதிகள் வேலை வாய்ப்பு குறித்து ஆராய்வு

யாழ்.மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்களை கவருவதற்கும் யாழ்.மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய விடயங்களை ஆராய்வதற்காக அமெரிக்க நாட்டின் குழு ஒன்று இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்திருப்பதுடன் காங்கேசன்துறை- நடேஷ்வரா கல்லூரிக்கும் விஐயம் செய்துள்ளது.

மிலேனியம் சலஞ்சஸ் தொடர்பா ன மதிப்பீடு செய்வதற்கான குழுவே இன்றைய தினம் யாழ்.வந்திருந்தது.

இதன்போது மேற்படி குழு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபர் என்.வேதநாயகனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதுடன், காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரிக்கும் விஜய ம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளது.

இதன்போது யாழ்.மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை எப்படி ஒழிப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை எப்படி கவருவது, உள்ளூரில் சுய தொழில் முயற்சிகளை செய்தவர்களை எப்படி மீண்டும் அந்த துறையில் ஈடுபடுத்துவது என்பன தொடர்பான விடயங்களை ஆராய்ந்து சென்றுள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: