இந்திய – இலங்கை பாலம் என்பது பிழையான செய்தி!

ramarpaalamதலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ அல்லது இந்திய அரசாங்கமோ கலந்துரையாடல்களை நடத்தவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறான செய்திகள் வெளியாவதாகவும் கூறியுள்ளார்.

தலவத்துக்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிராந்திய தேர்தலின்போது தெரிவித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: