மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

srமலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பைஅதிகரிக்க மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயர்ஸ்தானிகரின் வீடு, அலுவலகம் போன்றவற்றில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் அபூபக்கர்தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து இவர்தாக்கப்பட்டமையை அடுத்து இவரது பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில்இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: