250 கிலோ கிராம் வெடிக்காத குண்டு இதனை தான் போட்டார் முள்ளிவாய்க்காலில்

001கிளிநொச்சி  பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால்  கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசார் வந்து பார்த்த வேளை அது பாரிய குண்டு என அடையாளம் காணப்பட்டது. இதனை அடுத்து அது இலங்கை விமானப்படை வீசிய குண்டு ஆனால் வெடிக்கவில்லை என்பதனை பொலிசார் உணர்ந்துகொண்டார்கள்.

உடனே அவர்கள் விமானப்படைக்கு தகவல் சொல்ல, விமானப்படையினர் வந்து அதனை முதலில் செயலிழக்கச் செய்து பின்னர் அதனை அங்கிருந்து அகற்றிச் சென்றுள்ளார்கள். இவை படு வேகமாக நடந்து முடிந்துள்ளது. 250 கிலோ கிராம் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும் ? இதனை போல எத்தனை குண்டை முள்ளிவாய்க்கால் சண்டையில் இலங்கை ராணுவம் பாவித்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது ?

-http://www.athirvu.com

TAGS: