தலைவர் பிரபாகரனால் அடைய முடியாததை அடைவதே இலக்கு

SumanthiranTNAதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் அடைய முடியாததை அடையும் நோக்குடனும், இலக்குடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த கால அனுபவங்களை வைத்துக்கொண்டு அதனை ஒருவராலும் பெற முடியாது என தமிழ் மக்கள் கூறுவதும் நியாயமான ஒன்று எனவும் அவர் கூறினார்.

லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

2010ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களின் ஒரே விதமான ஆணையை பெற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. இந்த நிலையில் மக்களுடைய ஆணையின் பிரகாரமே கூட்டமைப்பு செயற்படுகின்றது.

அதைவிடுத்து வேறெந்த இயக்கத்துடனோ அல்லது அமைப்புடனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்பு கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/9_kDMdwTzWU

TAGS: