இயக்க பெடியள் காணமல் போனது உறுப்பு திருட்டுக்கே: கொழும்பு அப்பலோ கோட்டபாய …

நாங்க முள்ளிவாய்க்காலில் பிடித்த சில இயக்க பெடியளை, ஸ்பெஷல் வாகனத்தில் ஏற்றி கொழும்புக்கு கொண்டு வந்தோம். அவர்கள் முக்கியமான தளபதிகளும் இல்லை. முக்கியமான உறுப்பினர்களும் இல்லை. ஆனால் இளம் பெடியள். அவர்களை ஏன் நாங்கள் கொழும்பு கொண்டு செல்கிறோம் என்று எம்மிடம் எதுவும் தகவல் சொல்லவில்லை. உயர் அதிகாரி உத்தரவிட்டார் நாங்கள் அதன் படி செய்தோம்.

நான் ஓட்டிச் சென்ற பஜேரோ வாகனத்தில் இருந்த 4 தமிழ் பெடியளையும், கொழும்பு அப்பலோ மருத்துவமனைக்கு கிட்ட வைத்து வேறு ஒரு நபரிடம் கையளித்தேன் என்கிறார் ராணுவத்தில் இருந்து தப்பி வந்து தற்போது லண்டனில் சரணடைந்துள்ள சிங்கள சிப்பாய்.  கைகள் கட்டப்பட்டு இருந்த அந்த 4 இயக்க பெடியளுக்கும் மயக்க ஊசி போட்டு அவர்களை அப்பலோ மருத்துவ மனை பக்கமாக கொண்டு சென்றார்கள்.

பின்னர் பல நாட்கள் கழித்தே நான் ஒரு விடையத்தை அறிந்துகொண்டேன். அந்த தமிழ் இளைஞர்களின் உறுப்புகளை அறுத்து எடுத்து, இந்தியாவில் உள்ள பணக்கார நோயாளிகளுக்கு விற்றுவிட்டார்கள் என்று. சாதாரணமாக இளம் பெடியள் என்றால் தண்ணி அடிப்பார்கள். சிகரெட் பிடிப்பார்கள். அவர்கள் உடல் நிலை சற்று கெட்டு போய் தான் இருக்கும். ஆனால் புலிகள் இயக்கத்தில் இருந்த பெடியள் என்றால், ஒரு நாள் கூட சாரயத்தை சுவைத்திருக்க மாட்டார்கள். சிகரெட் பத்தி இருக்க மாட்டார்கள். அவர்கள் உடல் நிலை நல்ல ஆரோக்கியமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது நுரையீரல், சிறு நீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்திருக்கும்.

இது தான் காரணம் என்கிறார்கள். பிடிபட்ட பல இளைஞர்களை கொழும்பு கொண்டு சென்று, கோட்டபாயவின் கீழ் இயங்கும் அப்பலோ ஹாஸ்பிட்டலில் வைத்து அறுவை சிகிச்சை செய்து உறுப்புகளை எடுத்து இந்தியாவுக்கு விற்றுள்ளார்கள்.  ஒட்டு மொத்தத்தில் பல பெடியளை கோட்டபாய இவ்வாறு ரகசியமாக கொலை செய்து. பின்ன தான் வளர்த்து வந்த சுறா மீனுக்கு மீதமுள்ள உடல் பாகங்களை போட்டு அப்படியே அனைத்து தடையங்களையும் அழித்து விட்டார் என்கிறார் தப்பி வந்த ராணுவ சிப்பாய்.

-athirvu.com

TAGS: