வடமாகாண முதலமைச்சரிடம் மன்னிப்புக் கேட்கும் வேலையற்ற பட்டதாரிகள்

vikneswaran01வடமாகாண முதலமைச்சரின் மனம் உளைச்சலுக்குள்ளாகும் படி நாங்கள் செயற்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்புக் கோருவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண சபையின் முன்பாக நேற்று வேலையற்ற பட்டதாரிகள், வடமாகாண முதலமைச்சரைச் சபை வளாகத்திற்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்திப் போராட்டம் மேற்கொண்டனர்.

இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் நேற்று இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாதவாறு திரும்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டது.

இதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தன்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது பட்டதாரிகள் தன்னுடன் அதட்டலான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

-tamilwin.com

TAGS: