வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது: இராணுவத் தளபதி

jaffnaKili_02_40680_435வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சில குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்செயல்கள் அனைத்தையும் விடுதலைப் புலிகளின் மீது சுமத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா குழுவானது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என்று கூறியுள்ள இராணுவத் தளபதி, 12000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் ஏதேனும் தவறிழைத்தால், அதற்காக இந்த 12000 முன்னாள் போராளிகளும் நாளை ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என கருதுவது பிழையானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-puthinamnews.com

TAGS: