கண்டனம்…

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன, அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

(படங்கள்: வா.கிருஸ்ணா)

திருகோணமலையிலும் கண்டனம்…

தென்னிந்தியா தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இச்செயலைக் கண்டித்தும் கண்டனப் போராட்டம் திருகோணமலையில் இன்று (26) மேற்கொள்ளப்பட்டது.

மின்சார நிலைய வீதியில் உள்ள திறக்கப்படாத ஐக்கிய பொதுச் சந்தைக்கு முன்னால் இது மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், காலை 9 மணி தொடக்கம் 9.30 மணி வரை நடைபெற்றது.

இதில் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

(படங்கள்: எஸ்.சசிகுமார்)

-tamilmirror.lk

TAGS: