காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், த.தே.கூ இடையே பேச்சுவார்த்தை!

வடக்கு- கிழக்கில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்துக்கு கடந்த நாட்களில் விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், பாதுகாப்புப்ப படை முக்கிய அதிகாரிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது காணிகனை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

“இந்த சந்திப்பின்போது பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் காணி விடுவிப்பு தொடர்பில் நாம் வலியுறுத்தினோம். அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்களில் காணிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. எனினும் இரண்டரை வருடங்கள் கடந்தும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.” என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

-4tamilmedia.com

TAGS: