விஜயகலாவிற்கு கடும் எதிர்ப்பு! : சிங்கள ஊடகங்கள் கொந்தளிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தானது இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அவரின் கருத்துக்கு சிங்கள நாளேடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இன்று வெளியாகியுள்ள பல சிங்கள நாளேடுகள் விஜயகலாவின் கருத்துக்கு முதலிடம் கொடுத்துள்ளன. மேலும் அவரின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

“வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழலாம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

-athirvu.in

TAGS: